"அரு..."
உடனடியாய் கதவை திறக்காமல், சற்று நேரம் எடுத்துக் கொண்டான் அவன். அது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"என்னங்கப்பா?"
"நீ இன்னும் தூங்கலையா?"
"ஒரு முக்கியமான வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் பா"
"ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நாளைக்கு அந்த வேலையை பார்க்கலாமில்லையா?"
"நான் அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக தான் பா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்"
"நீ என்ன சொல்ற?" என்றார் முகத்தை சுருக்கி.
"ஒன்னும் இல்ல பா"
"உன் உடம்பை கெடுத்துக்காத. போய் தூங்கு"
"நான் இன்னிக்கு என்னோட தூக்கத்தை கெடுத்துக்கலனா, நிறைய விஷயங்கள் கெட்டுப் போயிடும் பா"
"நீ எதைப் பத்தி பேசுற?"
ஒன்றும் கூறாமல் அமைதியாய் நின்றான் அர்னவ்.
"ரிலாக்ஸ் அரு... நம்மால நடக்கப் போற எதையும் தடுக்க முடியாது"
"அஃப்கோர்ஸ்... நாளைக்கு நடக்கப் போறதை யாராலயும் தடுக்க முடியாது" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.
அவனது முகத்தில் தெரிந்த கோபத்தை கண்ட அரவிந்தன், நாளை ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அவர்களது நிம்மதியற்ற மனநிலை முடிவுக்கு வரயிருக்கிறதா? அவரது ஆர்வம் அதிகமானது.
"நீங்க போய் தூங்குங்கப்பா... ஐ வில் பி ஆல் ரைட்" என்றான்.
தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றார் அரவிந்தன்.
மறுநாள்
அர்னவ்வை பற்றி தெரியும் என்றாலும் நிம்மதியாய் இருக்க முடியவில்லை ரத்னாவினால். கரிமாவும் அதே நிலையில் தான் இருந்தார். ஒருவர் மற்றொருவருக்கு ஃபோன் செய்து, தங்களை சமாதானப்படுத்தியபடி இருந்தார்கள்.
சமையலறைக்கு வந்த அர்னவ், ரத்னா ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டான். அவன் வந்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை. மெல்ல அவர் அருகே சென்ற அவன், அவர் தோளை தொட்டான். பதற்றத்துடன் அவர் திரும்பினார்.
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...
22 ஒரு வழியாய்...
Start from the beginning