"அதனால தான் அவங்க உங்களுக்கு இவ்வளவு க்ளோசா இருக்காங்களா?"
"அதுக்காக மட்டும் இல்ல. ஷஷி தங்கமானவன். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற புரிதல் வார்த்தையால சொல்ல முடியாது. நாங்க ரெண்டு பேருமே வேற வேற பின்னணியில வந்தவங்களா இருந்தாலும், அதெல்லாம் எங்களுக்கு குறுக்கே வந்ததே இல்ல. அது நட்புக்கெல்லாம் அப்பாற்பட்டது. நண்பர்கள் எல்லாம் கடவுள் கொடுக்கிற வரம். அப்படித்தான் எனக்கு ஷஷி"
"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அதிர்ஷ்டசாலி" என்றான் நந்துகிஷோர்.
ஆமாம் என்று தலையசைத்த அரவிந்தன், அர்னவை பார்த்த போது, அவனது நிலைமை என்ன என்பதை உணர்ந்து, குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். தான் செய்த தவறு என்ன என்பதை புரிந்து வருத்தப்பட்டார். அதை நந்துகிஷோரும் புரிந்து கொண்டான். தன் நண்பனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில், அவர் தன் மகனை மறந்து விட்டார். அவர் மெல்ல அவன் கையை பற்ற, அவனது கண்கள் கலங்கி இருந்ததை கண்டார்.
"அரு, ஐ அம் சாரி டா. நான் உன் முன்னாடி பேசியிருக்கக் கூடாது" என்றார் வருத்தத்துடன்.
"பரவால்ல விடுங்க" என்றான் தன்னை சுதாகரித்துக் கொண்ட அர்னவ்.
ஆனால் அவனது உடைந்த குரல் அவன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது. அவற்றையெல்லாம் சமையலறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரத்னாவின் மூளை துரிதமாய் வேலை செய்தது. ஏதாவது செய்து தன் மகனின் கவனத்தை திசை திருப்ப முயன்றார். வெளியில் இருந்தவர்களை, தான் கீழே விழுந்து விட்டதை போல் உணரச் செய்து, சமையல் அறையில் இருந்து சத்தமிட்டார். வெளியே இருந்தவர்கள் தலைத்தெறிக்க ஓடிச்சென்று பார்த்த பொழுது, அவர் கீழே அமர்ந்து தன் காலை பிடித்துக் கொண்டு எழ முயன்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து பதட்டம் அடைந்த அர்னவ்,
"உங்களுக்கு என்னமா ஆச்சு?" என்று அவரை நோக்கி ஓடினான், தன் மன வருத்தத்தை மறந்து.
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...
3 அம்மாக்களின் விருப்பம்
Start from the beginning