❤ சிறுநகை 94

284 25 7
                                    

"இப்ப எதுக்கு தேங்க்ஸ எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க அண்ணி? கதிர் அண்ணாவுக்காக நான் இன்னும் நிறைய செய்யணும்! முதல்ல இருந்தே அவர் எங்கிட்ட பேசுறப்போ அவரோட பிஹேவியர்ல அவ்ளோ ஸாப்ட்னெஸ் தெரியும்! எனக்கு யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம்ங்குற மைண்ட்செட்ல நான் அவரோட அன்பை எவ்ளோ தடவ அவாய்ட் பண்ணியிருக்கேன் தெரியுமா? ஐ ஃபீல் கில்ட்டி அபௌட் தட்! எங்க வீட்ல எல்லாம் நான் எல்லாரோடயும் நார்மலா பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் தான் அவங்க என்னைய ஒரு மனுஷன் மாதிரியே ட்ரீட் பண்றாங்க! இல்லையின்னா எந்தங்கச்சி கூட என்னைப் பாத்து பயத்துல, வெறுப்புல முகத்தை திருப்பிக்குவா; ஆனா.... நான்
எவ்ளோ ஒதுக்குனாலும் கதிர் ப்ரோ என்னைய தப்பா நினைச்சதே இல்ல! இனி அவர் என்னை விட்டாலும்  இந்த லைஃப் முழுசுக்கும் நான் அவர விடுறதா இல்ல..... கதிர் தான் என் அண்ணா; நீங்க தான் என் அண்ணி!" என்று சொன்னவனிடமிருந்து சத்தியமாக இந்த மாதிரியான வார்த்தைகளை சந்தனா எதிர்பார்க்கவேயில்லை.

"என்ன மிஸ்டர் சஞ்சீவ் திடீர்னு அண்ணாங்குறீங்க? அண்ணிங்குறீங்க! நீங்க இப்டி பேசுற ஆளில்லயே? என்ன தான் பழகியிருந்தாலும் ஒரு லிமிட்ல தான ஆளுங்கள நிறுத்தி வப்பீங்க? என்னாச்சு உங்களுக்கு?" என்று ஆச்சரியமாக கேட்ட சந்தனாவிடம்,

"அறிவு வந்துடுச்சு அண்ணி" என்று  சொல்லி விட்டு புன்னகைத்தான் இளையவன்.

"ஓ..... அப்ப இத்தன நாள் அறிவில்லாம இருந்தீங்களா?" என்று அவனிடம் கேட்ட சந்தனா வேகமாக தன்னுடைய பின்புறத்தில் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

"நீங்க என்னை இப்டி பேசுறத அண்ணா கேட்டா உங்களுக்கு செம ரைடு விழும்.... அதான அண்ணி? பயப்படாதீங்க அண்ணா இன்னும் வரல!" என்று தோள்குலுக்கியவன் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணி போட்டதில் சந்தனாவிற்கு
பற்றிக் கொண்டு வந்தது. அவள் பயத்தை இவன் சரியாக கணித்து விட்டதிலும் தான்!

"சரி விடு சந்து.... ஏதோ ஆர்வக்கோளாறுல இந்த ட்டூத்பேஸ்ட் ஷாஷே அண்ணின்னு எல்லாம் கூப்ட்டு ஒரேடியா பொங்குறான்? இவனோட ஸ்டேட்மெண்ட் ஓகே தான்...! பட் ஆட்டிடியூட் தான் கொஞ்சம் இடிக்குது!" என்று நினைத்துக் கொண்டவளிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now