❤ சிறுநகை 13

490 28 1
                                    

"என்னடா நீ? அட் அ ஸ்ட்ரெச்ல எல்லாத்தையும் ஆலென்ட்ட போட்டு உடைச்சிட்ட! ஐ'ம் ரியல்லி டையர்டு ஆஃப் மேக்கிங் மணி! எவனாவது பணக்காரன கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாமான்னு நினைச்சு தான் உங்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டேன்; பட் நீ என்ன எப்பப்பாரு உங்கிட்ட எங்க பேமிலியில இருக்குற எல்லாரையும் வேலை பார்க்க வைக்குறதுலயே குறியா இருக்க? ஆலென நீ உங்கிட்ட வேலை பாக்க கூப்டக்கூடாது....!" என்று சொன்னவளை ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்த கதிர் அவளிடம்,

"ஏன் கூப்ட்டா என்ன தப்பு? நாளப்பின்ன மிஸஸ் கதிரா ஆகப்போறது உனக்கு அவமானமில்ல; ஆனா நமக்கு சொந்தமான கடைகள்ல உன் வீட்டு ஆளுங்க வேலை பார்க்குறது உனக்கு அவமானம்... அப்டித்தான? ஒருவேள உன் பேமிலியில இருக்குறவங்க எங்கிட்ட வேலை பார்த்தா எங்க நானும் உன்னை மாதிரியே அவங்கள உயிர வாங்குவேன்னு நினைச்சு உனக்குப் பயமாயிருக்கோ லஷ்மி?" என்று கேட்டவனது கண்கள் பளபளப்புடன் மின்ன சந்தனாவிற்கு அவன் கண்களைப் பார்த்த பிறகு அடிவயிற்றைப் பிரட்டியது.

"இங்க பாரு கதிர்..... சில நேரம் நீ அவ்ளோ கொயட்டா இருக்க; ஆனா ரேர் அக்கேஷன்ஸ்ல பசியோட காத்திருக்குற புலி இரையப் பாக்குறது மாதிரியே டெரரா மொறைக்குற; எல்லார்ட்டயும் உள்ள நின்னு ஒருமாதிரி பேசுற; வெளிய வந்து எங்கிட்ட வேற ஒண்ண பேசுற! ஆக்சுவலி நீ நல்லவனா?  கெட்டவனா? என்னை கொஞ்சம் கொஞ்சமா இப்டி சித்ரவதை பண்ணாத! உனக்கு எங்கிட்ட இருந்து என்ன தான் வேணும்?" என்று பயக்குரலில் கேட்ட சந்தனாவிடம்,

"நீ மட்டுந்தான் வேணும்..... மொத்தமா அந்த பழைய சந்தான லஷ்மியாவே எனக்கு நீ வேணும்!" என்றான் கதிர்.

"சரி ஓகே... அதுமட்டுந்தான்னா க்ராண்ட்டட்... எப்டியும் நான் எவனையாவது மேரேஜ் பண்ணிக்கத்தான செய்யணும்? அதுனால உன்னையே பண்ணிக்குறேன் விடு;
அம்மா வந்தவுடனே பாகேஸ் ஆன்ட்டிய இங்க கூட்டிட்டு வந்து பேசு. கல்யாணம் முடிஞ்சும் நாம நாகர்கோவில்ல தான் இருக்கணும்; ஆன்ட்டிய வேணும்னா இங்க கூட்டிட்டு வந்துடு; உங்க அப்பாம்மா, எங்க அப்பாம்மா, ஜெபா எல்லாரையும் நீ தான் பாத்துக்கணும். உன்னை நான் பாத்துக்குறேன்.....!" என்று சொன்னவளின் முன் தன் வலக்கையை நீட்டினான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now