❤ சிறுநகை 92

269 28 4
                                    

அன்று சஞ்சீவ் தன்னுடைய வேலையை இயன்ற அளவுக்கு விரைவாக முடித்து விட்டு சென்னைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். கதிருடைய
சென்னை வீட்டை கல்பனாவிற்கு  ரெஜிஸ்டர் செய்து தருவதற்காக அவன் சென்னைக்குப் போக வேண்டியதிருந்தது.

இன்று இரவு கிளம்பி விட்டால் நாளை காலையில் அங்கு சென்று
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கல்பனாவின் வீட்டில் இருந்து விட்டு திங்கட்கிழமை ரெஜிஸ்ட்ரேஷன் வேலைகளை முடித்து வர சரியாக இருக்கும் என்று நினைத்து கிளம்பிக் கொண்டிருந்தான்.

தன்னுடைய உதவியாளரிடம் இரண்டு நாட்கள் வரமாட்டேன் எனவும், செவ்வாய் அன்று வந்து வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியவன், தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.

கார் ஷெட்டையே பார்த்துக் கொண்டு வெளியே உலாத்திக் கொண்டிருந்தவள் அவனுடைய எண்ஃபீல்டின் சத்தம் கேட்டு துள்ளிக் குதித்துக் கொண்டு அவன் முன்னால் சென்று நின்றாள்.

"ஹாய் பொண்டாட்டி! இன்னும் தூங்கலையா நீ?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையாட்டியவள்,

"எனக்கு இத ஒரே ஒரு ரவுண்ட் ஓட்ட தர்றியா?" என்று தலைசரித்துக் கேட்டாள்.

"ஏன் அண்ணியும் நாத்தனாருமா சேந்து என் பைக்க ஒருதடவ கீழ போட்டு ஒடைச்சது பத்தாதா? மொதல்ல இத தூக்குற அளவுக்கு ரெண்டு பேரும் வளருங்க. அப்புறமா பைக் கிட்ட வாங்க!" என்றவனிடம் உச்சுக்கொட்டியவள்,

"நீயுந்தான் தென்னங்கீத்து மாதிரி வெடவெடன்னு இருக்க? நீ மட்டும் இத ஓட்டுற?" என்று வாதிட்டவளிடம்,

"நான் ஒல்லியா இருந்தாலும் ஸ்டெமினாவோட இருக்கேன்டீ குல்ஃபி! உங்க ரெண்டு பேர் கிட்டயும் அந்த எலிமெண்ட் மிஸ்ஸிங்க்!" என்றான் அவள் கணவன்.

"சரி சரி.... இதுல என்னைய ஒரு ரவுண்டாவது கூட்டிட்டுப் போயேன்!" என்று சஞ்சீவிடம் ஆசையாக கேட்டாள் குணாளினி.

"ம்ஹூம்! இட்ஸ் கெட்டிங் லேட்!நான் உடனே கிளம்பணும். மூணு நாள் நான் இல்லாம நீ எல்லார் கூடவும் ஜாலியா இரு. போயிட்டு வரட்டுமா?" என்று கேட்ட படி தன் வண்டியை நிறுத்தியவனின் பின்புறச் சட்டையைப் பற்றியிருந்தவள்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now