❤ சிறுநகை 90

Start from the beginning
                                    

"ஓகே ஆலென்.... இத உங்கிட்ட பேசி உன்னோட ஒப்பீனியன் கேட்டுடுவோம்னு நாங்க நினைச்சோம். கேட்டுட்டோம். கதிர் நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?" என்று கேட்ட சந்தனாவிடம்,

"இரு மோளே.... சாப்ட்டுட்டு போலாம்!" என்றார் ஆலென்.

"ம்ஹூம்! அங்க பாகேஸ் ஆன்ட்டி எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நாங்க கிளம்புறோம் ஆலென், அம்மா பை ம்மா.... டேய் தம்பிப்பையா கிளம்புறோம்டா!" என்று சத்தமாக குளியலில் இருக்கும் ஜெபாவிடமும் சொல்லி விட்டு சந்தனா அவளுடைய அறைக்குள் சென்றாள்.

"மாமா.... நான் உங்களுக்கு ஏதாவது கஷ்டம் குடுக்குறேனா?" என்று தயக்கத்துடன் அவரிடம் கேட்டான் கதிர்.

தன் அப்பனிடம் இந்த மாதிரியான கேள்வியைக் கேட்கும் எண்ணமாவது முதலில் தோன்றுமா என்று நினைத்த கதிருக்கு அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆலெனிடம் இப்போது கேட்ட உதவி கொஞ்சம் அளவில் பெரியதோ என்ற எண்ணத்தில் வந்து முடிந்தது.

"ஒரு பிஸினஸ ஸ்டார்ட் பண்ணும் போது இதுல இருந்து நமக்கு எவ்வளவு ஆதாயம் கிடைக்கும்னு யோசிக்காம, இதுல இருந்து எத்தனை பேருக்கு நல்லது கிடைக்கும்னு யோசிக்குறீங்க பாத்தீங்களா..... இந்த இயல்போடயே கடைசி வரைக்கும் இருங்க மாப்ள; மாறிடாதீங்க! ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவிய உங்களுக்கு செஞ்சு தர்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! இப்ப கிளம்புங்க..... நாம இன்னிக்கு இல்ல நாளைக்கு நைட் நீங்க இங்க வரும்போது இதப்பத்தி இன்னுங்கொஞ்சம் தெளிவா பேசிக்கலாம்!" என்று சொன்ன ஆலெனிடம்,

"ரொம்ப தேங்க்ஸ் மாமா! வர்றேன் மாமா, பை அத்தை!" என்று கவலை அகன்ற மனத்துடன் சொல்லி விட்டு புறப்பட்டான் கதிர்.

வீட்டுக்குச் சென்று சந்தனாவிற்கு பை சொல்லி அவளை பார்லருக்கு அனுப்பி வைத்தவன், தன்னுடைய அன்னையை கடையில் கொண்டு சென்று விட அவருடன் ரெடிமேட்ஸ்க்கு கிளம்பினான்.

"கதிரு.... சந்தோஷமா இருக்கியா சாமி? முகமெல்லாம் ஒரேடியா மலந்துருக்கு?" என்று மகனின் மகிழ்ச்சியைப் பார்த்து அவரும் புன்னகைத்து பிள்ளையிடம் கேள்வி கேட்டார் பாகேஸ்வரி.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now