❤ சிறுநகை 89

271 24 3
                                    

"எந்தன் முகம் காட்டும்...
புன்னகைகள் தீட்டும்...
மனதின் கண்ணாடி நீயே...

என்னை என்னை போலே...
ஏற்றுகொண்டதாலே...
எதிரொலியாகிடுவாயே...

கண்டதை பாடவும்...
கண்மூடி ஆடவும்...
என் துணை ஆகிட வந்தாயே...

சண்டைகள் போடவும்...
பின் வந்து கூடவும்...
ஆயிரம் காரணம் தந்தாயே...

வண்ணங்கள் நானே
நீ தூரிகையே...
இதய சுவரில்
இறைவன் வரையும்...
சிறுநகையே...

நந நநநா நாநநா
நந நநநா நாநநா!" என்று ஹெட்செட்டின் உதவியுடன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் ஒன்றியிருந்தவன் ஜெபாவை அந்நேரத்தில் மொட்டை மாடியில் கண்டதும்,

"வாடா சேகர்.... என்ன திருட்டு தம்மா?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"ம்ஹூம்! திருட்டு ட்ரீட்மெண்ட்; இன்னிக்கு அசிங்கமா ஒரு இடத்துல விழுந்து வாங்குனேன். வீட்ல சொன்னா எல்லாரும் கலாய்ப்பாங்க; அதுனால தான் மெல்ல மாடிக்கு வந்துட்டேன்.
மூக்கு வலிக்குது அத்தான்!" என்று கதிரிடம் சொன்னவன், தன்னுடைய கையிலிருந்த ஐஸ்கட்டியை கைக்குட்டையில் கட்டி மூக்கின் மீது ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தான்.

"என்னடா இது? மூக்குல அடிபடுற அளவுக்கு என்ன ஆச்சு? யார் கூடயாவது கட்டி உருண்டு சண்டை போட்டியா? நீ அதுமாதிரி வம்பு சண்டைக்கு எல்லாம் போற ஆளில்லயேடா? எதுக்கும் ஒருதடவ டாக்டர்ட்ட போயிட்டு வந்துடலாம்.... வர்றியாடா?" என்று கேட்ட தன்னுடைய அத்தானிடம் உச்சுக்கொட்டியவன்,

"ஆமா.... வார்ல கலந்துக்கிட்டு என் உடம்புல குண்டு பட்டுடுச்சு; டாக்டர் கிட்ட போய் உடம்ப காட்டுறதுக்கு! நீங்க வேற ஏன் அத்தான் சும்மா கடுப்ப கெளப்பிக்கிட்டு இருக்கீங்க? நா போயி கட்டி உருண்டு சண்டை போட்டேன்னா அத உங்க கிட்ட சொல்லியிருக்க மாட்டேனா? இது ஜஸ்ட் ஸ்லிப் ஆகி விழுந்து வாங்குன அடி.... சரி அத விடுங்க..... என்ன இங்க நின்னுட்டு தனியா பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க? உங்களோட ஜோடிப்புறா ரூமுக்குள்ள படுத்து தூங்கிட்டா போலிருக்கு! அதென்ன நடுராத்திரி வரைக்கும் புருஷனும் பொண்டாட்டியும் மைல்டான வாய்ஸ்ல ஏதோ பேசிக்கிட்டே இருக்கீங்க?" என்று கேட்டவனிடம் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியவன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now