❤ சிறுநகை 84

328 31 10
                                    

"ஏன்டா.... வெட்ட வெடியால எழுந்திரிச்சு எதுக்குடா என்னைய இப்ப எங்கயோ ஓட்டிக்கிட்டு போய்ட்டு இருக்க? கேலரிக்கா போறோம்?" என்று கேட்ட கதிரிடம் ஆமென தலையாட்டினான் சஞ்சீவ்.

"மிஸ்டர் ரேஷ்.... எனக்கு ஒரு டவுட்டு! நேத்து ராத்திரி படுக்கும் போது நீங்க எனக்கும், அவனுக்கும் நடுவுல தான படுத்துருந்தீங்க.... காலையில எழுந்திரிக்கும் போது உங்க வொய்ஃப் பக்கத்துல இருந்து எழுந்திரிக்குறீங்க? இதெல்லாம் புதுசா கல்யாணம் ஆன எஃபெக்டா? லவ் பண்றதுன்னா அத ப்ரைவேட்டா பண்ண வேண்டியதுதான? எதுக்கு எங்க எல்லாரையும் ஆடியன்ஸா வச்சுக்கிட்டு பண்றீங்க?" என்று கேட்டவனிடம் ஒன்றும் பேசாமல் மவுனச்சிரிப்புடன் அமர்ந்திருந்தான் கதிர்.

நேற்றிரவு அவனிடம் "டேய்.... நாந்தான் உங்கிட்ட முதல்லயே சொன்னேன்ல....? ஜெபா, சஞ்சீவ் கூட போய் படு!" என்று சொன்னவளிடம் பதில் பேசாமல் தலையாட்டியவன் தன் மனதிற்குள்ளாக,

"மொதநாளே கூட படுக்க விடாம சூனியம் வைக்கிறா பாரு.... எதுவும் கிடையாது சரி; பக்கத்துல கூடவா படுக்கக்கூடாது? இன்னிக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் சரி;
உன் பக்கத்துல வந்து படுத்த பிறகு தான்டீ நான் தூங்குவேன்!" என்று சூளுரை மேற்கொண்டவன் உண்மையிலேயே அவளுக்குப் பக்கத்தில் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்ட பிறகு தான் அமைதியாக உறங்கினான்.

"ஹலோ பாஸ்... என்ன மறுபடியும் ட்ரீமுக்கு போயாச்சா.... ம்ஹூம் நீங்க சரியில்ல!" என்று சொன்னவனிடம்,

"ம்ம்ம்! சரியாயில்லன்னா.... என்னைய ஒழுங்கா அடுக்கி வச்சுட்டு போ!" என்று கிண்டல் செய்தான்.

"அடுக்கி எல்லாம் வைக்க முடியாது!
இப்டியே இருங்க.... பட் சீக்கிரத்துல ரெகவர் ஆகிடுங்க; மிஸ்டர் கிருஷ்ணராஜ பத்தி விசாரிக்க நான் ஷேடோ யாரையாவது அரேன்ஜ் பண்ணவா பாஸ்?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டிய கதிர்,

"விடுறா.... எங்களோட அந்தாளு இல்லாம இருக்கட்டும் சரி; எப்டியோ ஊர் சுத்திக்கிட்டு வேலை வெட்டிக்குப் போவாம இருக்கட்டும் அத கூட பொறுத்துக்கலாம்; பட் சொல்றதுக்கே அசிங்கப்படுற வேலையெல்லாம் செஞ்சான்னா என்னடா பண்றது?" என்று சொன்னவனை பார்த்து அதிர்ச்சியுற்றவன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now