"மாமா..... நீ சூப்பராருக்க!" என்று சொன்ன இளமதி கதிருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனுடைய தோளில் சாய்ந்து படுக்கையில் அமர்ந்திருந்த அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
இளமதி அழகாக இருக்கிறாய் என்று சொன்னதற்கு ஏற்றாற் போல கதிர் தன்னுடைய திருமண உடையில் ஒரு தேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் போல தோற்றமளித்தான்.
அடர் க்ரே நிற ஜாக்கெட், வெஸ்ட், பேண்ட் அடங்கிய 3 பீஸ் ஸுட்டுடன் அவனது வெள்ளை நிற சட்டை மிகப்பாந்தமாக பொருந்தியிருந்தது. அவன் கட்டப்போகும் டையை முதலிலேயே சந்தனா அழகாக கட்டி தயார் நிலையில் வைத்து விட்டுப் போய் விட்டாள். தனக்கு டை கட்டிக்கொள்ளத் தெரியாது என்று சொன்னதில் தான் குணாளினி அவனுக்காக தைத்துத் தந்த கோட்டை எடுத்து மதியம் அவனுடன் சண்டையிட்டு சென்றிருந்தாள்.
ப்யூட்டி பார்லரில் மேக்கப் முடிந்து தன்னுடைய அலங்காரத்தில் அவனுக்கு போட்டோ அனுப்பியிருந்த சந்தனாவுடைய புகைப்படத்திற்கு இதழ் பதித்தவன்,
அலைபேசியில் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்த குட்டி இளமதி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள்."போதா.... மாமா! நீ என்னைய கண்ணாதில இப்தி காத்தவேயில்ல!" என்று உதடுபிதுக்கியவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானம் செய்தவன் எழுந்து சென்று
குழந்தையுடன் கண்ணாடியின் முன் நின்றான்."டேய் மதிக்குட்டி..... மாமாவும், குட்டிநிலாவுமா கண்ணாடி முன்னால நிக்குறப்ப மாமாவ விட குட்டிநிலா தான் ரொம்ப அழகாயிருக்குற மாதிரி தெரியுதுடா செல்லம்! அதுனால கண்ணாடியில தெரியுற குட்டிநிலாவுக்கு மாமா இப்ப ஒரு கிஸ் குடுக்கட்டுமா?" என்று அவளிடம் கேட்டுவிட்டு அவனுடைய முதுகில் இருந்த இளமதியை பத்திரமாக கட்டிக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான்.
சந்தனா அக்காவிற்காவது அவளுடைய போட்டோவுக்கு தான் மாமா முத்தம் குடுத்தான்; ஆனால் எனக்கு என்னுடைய நிழலுக்கே முத்தம் கொடுத்து விட்டான் என்று நினைத்த அந்த குழந்தைக்கு பரம சந்தோஷம்!
YOU ARE READING
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
Romanceமிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல்...