❤ சிறுநகை 77

315 27 3
                                    

"டேய்.... நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா? உன்னோட வெட்டிங் சூட்ட விட சஞ்சீவோடது தான் ரொம்ப அழகாயிருக்குடா; அதுனால நீ உன்னோடத அவங்கிட்ட குடுத்துட்டு, அவனோடத நீ வச்சுக்க!" என்று சொன்ன தன்னுடைய மனைவியை உனக்கு அறிவு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியுடன் பார்த்த கதிர்,

"அவனோட உயரம் என்ன? என் உயரம் என்ன? அவனோட பாடி எப்டி? என்னோடது எப்டி? இப்டி எதையுமே யோசிக்க மாட்டியாடீ சூபொ? காலையில கல்யாணத்துல நாம மேட்சிங்கா தான ட்ரெஸ் பண்ணியிருந்தோம்? அது அழகாவும் இருந்ததுல? அதே மாதிரி ஈவ்னிங்கும் ஒரே நிறத்துல ரெண்டு பேரும் ட்ரெஸ் போடணும்னு நெனச்சுத்தான் நான் குணாளினிட்ட க்ரே கலர்ல கோட் சூட் கேட்ருந்தேன். உன்னோடது க்ரே கலர் டிஸைனர் பொடவ தான? நாம ரெண்டு பேருமா இப்பயும் சேம் சேமா ட்ரெஸ்ஸூ போடுறத விட்டுட்டு, அவனுக்காக அவங்க ஆசையா தைச்சு எடுத்துட்டு வந்தது அழகாயிருக்குங்கறதால அத நான் எப்டிம்மா போட்டுக்க முடியும்?"

"நாம ஹனிமூனுக்கு பொள்ளாச்சி போவோம்ல.... அப்ப வேணும்னா நம்ம குணாளினியோட கடைக்கே போய் அண்டங்காக்கா ப்ளாக்ல எனக்கு ஒரு கோட்ட தச்சு வாங்குவோம்! இப்ப மலையேறிடு செல்லம்!" என்று அவள் கன்னம் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"நாம பொள்ளாச்சிக்கு ஒண்ணும் ஹனிமூன் போகல.... உங்க புரஃபொஸர் நம்மள அஸ்ஸாமுக்கு கூப்ட்டுருக்காரு! அங்க தான் போறோம்!" என்று தலையை சாய்த்துக் கொண்டு சொன்னவளிடம்,

"ம்ம்ம்! போவோம்! நல்லாப் போவோம்.... இடுப்புல இடுக்கிக்கிட ஒரு குரங்குக்குட்டி வர்ற வரைக்கும் டைம் கிடைக்குறப்ப எல்லாம் ரவுண்ட்ஸ் தான்! ஒவ்வொரு ப்ளேஸஸையும், வேற வேற லைட்டிங் எஃபெக்ட்ல பாக்கும் போது நம்ம கையெல்லாம் பரபரங்க ஆரம்பிச்சிடும் தெரியுமா செல்லம்?" என்று கேட்டவனை காதலால் மூக்கோடு மூக்கு உரசினாள் சந்தனா.

"கொஞ்சநேரம் தூங்குடீ பொம்ம! காலையில சீக்கிரமே எழுந்திரிச்சது டயர்டா இல்லையா?  நீ ரெஸ்ட் எடுப்பன்னு நெனச்சு எல்லாருக்கும் டேக்கா குடுத்துட்டு, உன்னைய தனியா நகட்டிக்கிட்டு வந்தா, உள்ள வந்ததுல இருந்து நொசநொசன்னு பஞ்சாயத்த தான் கூட்டிக்கிட்டு இருக்க!" என்று சொன்னவனிடம் கடுப்பில் உச்சுக்கொட்டியவள்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now