❤ சிறுநகை 73

288 28 10
                                    

கண் இமைகளை தாண்டி வந்த கண்ணீருடன் அப்படியே நின்று கொண்டிருந்தவனை பார்த்து விட்டு சிரித்த முகமாக அமர்ந்திருந்த கதிர் முகம் சுருக்கினான்.

"டேய் சேகர்.... வொய் வாட்டர்டா?" என்று அவனிடம் கதிர் கேட்க, ஜெபா தன்னுடைய கண்ணீரைத் துடைத்த படி,

"ஃபீல் வாட்டர் அத்தான்!" என்று மெல்லிய குரலில் சொன்னான்.

அக்காவிற்கு திருமணம் ஆகி விட்டதே என்று நினைத்து அழும் ஒரு தம்பி மினுவின் கண்களுக்குப் புதிதாக தெரிந்தான். அவளுக்கும் தான் வந்து வாய்த்திருக்கிறானே அண்ணன் என்ற பெயரில் ஒரு ஹிட்லர் என்று நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டவள் ஆசையாக ஜெபாவின் பக்கத்தில் சென்று நின்றாள்.

"யூ ஆர் ஸோ கூல் ஜெபா அண்ணா... அழாதீங்க! உங்க சிஸ்டர்க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னவுடனே ஃபீல் பண்ணி அழுவுறீங்க பாத்தீங்களா.....? நீங்க தான்னா ரொம்ப நல்ல அண்ணா!
தண்ணி குடிக்குறீங்களா?" என்று அவனிடம் கேட்ட மினு அவன் முன்பாக தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

"தண்ணில்லாம் வேண்டாம் மினு; சந்துவ பார்த்துட்டே இருந்தேனா? கொஞ்சம் ஃபீல் ஆகிடுச்சு! நீ போடா. என்னாச்சுன்னு கேட்டு ஓடிவந்ததுக்கு தேங்க்ஸ்!" என்று அவளின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேறுபுறமாக சென்றான்.

கதிருடைய திருமணம் என்ற அழைப்பில் நாகர்கோவிலுக்கு வந்ததில் இருந்து குணாளினியும் மினு இருவரும் எல்லாரையும் விட இவனிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டனர். அதனால் இப்போது ஜெபாவின் கண்ணீரை அந்த சிறுபெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"அம்மாடியோவ்.... நீங்க என்னங்கண்ணா இவ்ளோ உயரமா இருக்கீங்க? நீங்க ப்ளேயரா?" என்று கேட்ட படி தன்னுடைய நெஞ்சுக்கும் சற்று குறைவான உயரத்தில் இருந்த மினுவை ஜெபாவிற்கும் மிகவும் பிடித்துப் போனது. பிறந்ததில் இருந்து இவனுக்கு இவன் கேட்காமலே மரியாதை அளித்த முதல் பெண்..... அதனால் கூட அவனுக்கு மினுவின் மேல் பிடித்தம் ஏற்பட்டிருக்கலாம்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now