❤ சிறுநகை 72

274 25 9
                                    

வட்டவிளை பெருமாள் கோவிலில் கதிருக்கும், சந்தனாவிற்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.  தன்னுடைய மனைவியைப் போலவே மகளும் கோவிலிலும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்ட ஆலென், கதிரும் அவரிடம் வாய்விட்டு அதைக் கேட்டு விட்ட பிறகு இந்த கோவிலில் அவர்களுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

சஞ்சீவுடைய குடும்பத்தினர், கல்பனாவின் குடும்பம், கதிருடைய ஆசிரியர் மாணிக்கவேலை தவிர மற்ற பணியாளர்கள் பதினைந்து பேர் தான் திருமணத்திற்கு வந்திருந்தாலும் இதுவும் ஒரு வகையில் நிம்மதியான உணர்வாகத் தான் இருந்தது ஆலெனுக்கு.

அவரது குடும்ப உறவினர்கள், சுமலதாவினுடைய குடும்பத்தினர் எல்லோரும் இங்கு வந்திருந்தால் கண்டிப்பாக இன்று இங்கு நடக்கப்போகும் சுபநிகழ்வில் நிறைய சலனங்கள் ஏற்பட்டிருக்கலாம்; இரண்டு மாலைகள், ஒரு தாலி, ஒரு தட்டில் அட்சதை என மிக மிக எளிமையாக நடக்க இருந்த இந்த மாதிரியான திருமணத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை..... அதற்காக ஆலெனின் குடும்பத்தினர் இனி வருந்தப் போவதுமில்லை.

கதிர், சஞ்சீவை விட ஜெபா தான் இந்த திருமணத்திலும், கோவிலின் சுற்றப்புறத்தினாலும் மிகவும் கவரப்பட்டான். தன்னுடைய அக்காவின் திருமணம் இன்று நடைபெற இருந்ததாலோ என்னவோ, குழந்தையைப் போல் மாறி அனைத்து விஷயங்களிலும் குதூகலித்தான்.

"கதிர்ணா..... ஸாரி அத்தான்; இந்த ப்ளேஸ் எவ்ளோ அழகா இருக்குன்னு பாருங்களேன்! கோவிலுக்கு வெளிய வாசல்ல அழகா மஞ்சள் பூவ கொட்டிக்கிட்டு இருக்குற மரமும், கோவிலுக்குள்ள இருந்து வர்ற நாதஸ்வர சத்தமும், மண்டபத்துல உக்காந்து சாமி ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்குறதும், அவரோட டிவோட்டீஸ் அவரு முன்னால நின்னு ஏதேதோ பாட்டு பாடுறதும், இந்த கோவிலுக்குள்ள குடுக்குற லட்டு பிரசாதத்தோட வாசமும்...... நீங்க புதுசா இந்த இடத்துல ஒரு பெயிண்டிங்கே வரையலாம் போங்க! இட்ஸ் ரியல்லி அ டிவைன் ஃபீல்! ஒரு வாய் லட்டு சாப்டுறீங்களா?" என்று கதிரிடம் கேட்டான் ஜெபசேகரன்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now