கதிரும், சந்தனாவும் சாப்பிட்டு முடிப்பதற்குள் சஞ்சீவும், ஜெபாவும் திரும்பி வந்திருந்தனர். தன்னுடைய கைகளில் ஒரு பெரிய கேக் பெட்டியுடன் வந்து அவளது முன்பிருந்த டேபிளில் அதை வைத்தவன் சந்தனாவிடம்,
"மிஸ் சந்தனா.... ஸாரி! உங்க நிச்சயதார்த்தம் பத்தி உங்களோட எக்ஸ்பெக்டேஷன் என்னன்னு நான் கேட்டுருக்கணும்; அத செய்யாம விட்டது என் தப்பு!
கடையில ரெடியா இருந்த கேக்க உங்களுக்காக அப்டியே வாங்கிட்டு வந்துட்டோம். ப்ளேவர் மட்டும் நீங்க நெனச்சது மாதிரி இருக்குமான்னு தெரியல! அத கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க!" என்று சொன்னான். அவனது பேச்சைக் கேட்டவள் வியந்த குரலில்,"நெஜமாவே ரெண்டு பேரும் போயிட்டு கேக் வாங்கிட்டு வந்தீங்களா? தே.... தேங்க் யூ சோ மச் சஞ்சீவ்! இவங்கிட்ட நான் சும்மா கம்ப்ளைண்ட் பண்ணுனேன் தான்.... ஆனா திடீர்னு கேக் எல்லாம்..... இத சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணல!" என்றாள் உற்சாகம் குறையாமல்.
"ஆமா....... நீ குடுக்குற இம்சைக்கு மதிப் பாப்பாங்களே பரவாயில்ல!
பலூனு வேணும், கேக்கு வேணும்னு கைய கால ஒதச்சு அழுதா, ஒம்புலம்பல கேக்குறவன் இதல்லாம் வாங்கிட்டுத் தான் வருவான்! எப்டி என் அஸிஸ்டெண்ட்...... சும்மா லோட் பண்ணி வச்ச கன் மாதிரி தெறிக்குறான் பாத்தியா? இந்தா.... உங்க தம்பியாரு கொண்டு வந்துருக்குற பலூனயும் கையில வாங்கிக்க..... இப்ப சந்தோஷமா?" என்று கதிர் கேட்க சந்தனா அவனிடம் உச்சுக்கொட்டி விட்டு,"இல்ல..... இன்னும் எதோ குறையுது!" என்றாள் உதடுபிதுக்கி.
"டேய் சேகர்..... இப்டி எப்ப பாத்தாலும் நம்ம எல்லாரையும் ஒரு பதட்டத்துலயே வச்சுருந்தான்னா அவளுக்குத் தான் நல்லதில்ல பாத்துக்க! ஒருநேரம் இல்லாட்டி ஒருநேரம் கடுப்புல இவள ஓங்கி அப்பிருவேன். அப்புறம் உங்க அக்காவுக்கு ஏத்துக்கிட்டு நீ எங்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது! சொல்லி வைடா இவகிட்ட!" என்றான் கதிர்.
"பாரு....பாரு! இதத்தான் சொன்னேன். ஒரு எக்ஸைட்மெண்ட் இருக்கா இந்த இடத்துல? எம்மேல கோபப்பட்டு ஜெபாட்ட
மூஞ்சிய காட்டிக்கிட்டு இருக்க!" என்று உதடுபிதுக்கியவளின் முகத்தைப் பார்த்தவன் ஆயாசமாக சேரில் அமர்ந்து விட்டான்.
YOU ARE READING
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
Romanceமிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல்...