"என்னடீ இப்ப ஒம்ப்ரச்சன?" என்று கேட்டவனிடம்,
"சரியா மூச்சுவிட முடியல! அதான் ப்ரச்சன! கொஞ்சம் எம்மேல இருந்து எழுந்திரிக்க முடியுமா?" என்றாள் சந்தனா.
"ம்ப்ச்! அதுக்குள்ளயா? உங்கம்மா வர்ற வரைக்கும் இப்டியே கெடப்போமே?" என்று அவளிடம் கேட்டவனிடம் கோபமாக,
"டேய்.... என் உடம்பு என்ன ஒனக்கு மசாஜ் சேர் மாதிரி தெரியுதா? ஆ ஊ ன்னா என் நெஞ்சுல வந்து கம்பர்டபிளா சாய்ஞ்சுட்டு நின்னுக்குற, படுத்துக்குற? நானும் பாவம் பையன்; பயந்து போயிருப்பானா இருக்கும்னு நெனச்சு எடங்குடுத்தா நீ இன்னும் என் தலமேல ஏறி ஒக்காந்துக்குவ போலிருக்கே?" என்று அவனிடம் கேட்டாள் சந்தனா.
குரலில் பொய்யாக கோபம் இருந்தாலும், அவள் விரலில் அவ்வளவு அக்கறை தெரிந்தது கதிருக்கு. நெற்றி, புருவம், சிகை, காது என அவளால் தொட முடிந்த அவனது அனைத்து உடல் பாகங்களையும் இதமாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
முன்பெல்லாம் இவள் கோபமாக இருந்தாள் என்றால் இவளது மூச்சுக்காற்றில் கூட அனல் தெறிக்கும்! இப்போது இவள் காட்டும் கோபத்தில் கூட குளிர்தென்றல் தான் வீசுகிறது! கோபத்தை பொய்யாக காட்டி, செய்கையால் இதம் தரும் இவளுக்கு எனது வலி நன்றாகவே
புரிகிறது என்ற நினைப்பே மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது கதிருக்கு."வெறும் ஒரு மசாஜ் சேரெல்லாம் இவ்ளோ சுகமா இருக்காது லஷ்மி! மூளைக்குள்ள ஏறி உக்காந்த சூடெல்லாம் உன் விரல் வழியா வெளிய வர்ற மாதிரி என்ன மந்திரம்டீ போடுற? என் கவலையெல்லாம் அப்டியே கரைஞ்சு காணாமப் போயிடும் போலிருக்கு!" என்று சொன்னவன் அவனது பிடியை இன்னுங்கொஞ்சம் இறுக்கமாக்கினான்.
"அட திமிங்கலமே; உன் வேலைய மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? ஹக் பண்ணும் போது ரொம்ப அழுத்தாதடா! நான் உன் அளவுக்கு ஸ்ட்ராங்க் இல்ல; எனக்கு வலிக்குது!" என்று சொன்னவளிடம் பெருமூச்சு விட்டவன்,
"ஏன்டீ..... சும்மா கட்டிப்புடிச்சாவே வலிக்குதுன்னன்னா அப்புறம் பரத்தும், சுசீலாவும் எப்டிடீ வருவாங்க? நான் ஏற்கனவே
அவங்களோட முகம், முடி, கலர் காம்ப்ளெக்ஷன் இப்டி எல்லாம் யோசிச்சு வச்சுட்டேனே.....? நான் உனக்குள்ள போ..... ஐயயோ...... ஒருநிமிஷம் உன்னோட காதக்காட்டு! இது கொஞ்சம் சென்ஸார் பண்ற மாதிரி போகும் போலிருக்கு!" என்று சொல்லி விட்டு அவளுடைய காதில் ஏதோ ரகசியம் பேசி அவளிடமிருந்து கன்னத்தில் இரண்டு அறைகள் வேறு வாங்கிக் கொண்டான்.
YOU ARE READING
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
Romanceமிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல்...