❤ சிறுநகை 64

274 27 12
                                    

ஆலென் வீட்டில் நுழைந்ததும் பாகேஸ்வரி, கல்பனா, ஜனார்த்தனன் மூவரும் ஆலென், ஜெபா இருவரின் கைவண்ணத்தில் நன்கு தழைத்து வளர்ந்திருந்த நிறைய ரோஜா வகைகளைப் பார்த்து வியந்து அவருடன் மொட்டைமாடி வரை ஏறிச் சென்று விட்டனர்.

"அக்கா..... இங்க நாம பொண்ணப் பாக்க வந்தமா இல்ல பூவப் பாக்க வந்தமா? நீங்க பாட்டுல வந்ததும் வராததுமா மாடிக்கு ஏறிக்கிட்டு இருக்கீங்க?" என்று கல்பனாவை அரட்டிக் கொண்டிருந்த கதிரிடம்,

"ப்ரதர்..... நாங்க மூணு பேரும் சந்தனா அப்பாட்ட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு; பேசிட்டு வந்துடுறோம்! நீ வேணும்னா அவளப் போயி பாத்து பேசிட்டு இரேன்!" என்று சொல்லி விட்டு ஏறிய கல்பனாவை அதற்கு மேல் கதிர் பிடித்துக் கொண்டு நிற்கவில்லை.

சஞ்சீவ் ஹாலில் அமர்ந்திருக்க கதிரை இருக்கையில் இருந்து எழுந்திரிக்க அனுமதிக்காமல்
வெண்மதியும், இளமதியும் மட்டும் சந்தனா அக்காவை பார்க்கப் போகிறோம் என்று அவனிடம் சொல்லிவிட்டு அவளுடைய அறைக்குள் ஓடி விட்டனர்.

"டேய் சேகர்.... என்னடா ரெண்டு எட்டுல அவ ரூம வச்சுக்கிட்டு என்னைய உள்ள உட மாட்டேங்குறீங்க! எனக்கு லஷ்மிட்ட நிறைய பேசணும்டா!" என்று சத்தமான குரலில் அவளது அறையின் கதவைப் பார்த்தபடி
கத்தியவனை சஞ்சீவும், ஜெபாவும்  ஏகத்திற்கும் முறைத்தனர்.

"யேய்... என்னடா ரெண்டு பேரும் என்னைய இப்டி மொறைக்குறீங்க? அதான் ஹால்ல யாருமில்லல்ல; அப்ப நான் இப்டித்தான் கத்துவேன்; டேய் சஞ்சீவ்..... வீட்ல என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியும்ல? எங்கப்பன் குடுத்த கொடச்சலுக்கு என் தலையெல்லாம் விண்ணு விண்ணுன்னு தெறிக்குது! இன்னும் அந்த அம்மா வந்து எந்த குண்ட எப்புடிப் போடப்போகுதோ தெரியல. இந்த ரணகளத்துல கொஞ்ச நேரம் நான் என்னோட வசந்த கோகிலத்த பாத்துட்டு வந்தா உங்க ரெண்டு பேருக்கும் எங்கடா வலிக்குது?" என்று இருவரிடமும் கேட்டான் கதிர்.

"தலவலிச்சா ஒரு டோலோவ வாங்கிப் போடாம சும்மா இன்னொருத்தர் வீட்ல வந்து உக்காந்து கத்திக்கிட்டு..... ஊப்.........ஸ்!" என்று தன் காதைக் குடைந்து கொண்டு பெருமூச்சு விட்டான் சஞ்சீவ்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now