❤ சிறுநகை 61

310 28 10
                                    

இரவில் எட்டுமணிக்கு சாப்பிட்டு முடித்த கல்பனாவும், ஜனார்த்தனனும் உறக்கம் வருகிறது என்று சொல்லி அனைவருக்கும் குட்நைட் கூறி விட்டு படுக்கச் சென்று விட்டனர்.

"பிள்ளைங்களுக்கு தூக்கம் வந்தவொடனே நீ அதுக ரெண்டையும் கூட்டிட்டுப் போயி
பாப்பா ரூம்புல படுக்க வச்சுரு தங்கம்!" என்று கதிரிடம் சொன்ன பாகேஸ்வரியும் உடல் சற்றே அயர்ச்சியாக இருக்கிறதென்று சொல்லி விட்டு படுக்க சென்று விட்டார்.

சஞ்சீவ், கதிர், பிள்ளைகள் என நால்வரும் தூக்கம் வராமல் வீட்டின் வராண்டாவில் பாயை விரித்து லூடோ விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்க கதிர் தன் விளையாட்டை சரியாக விளையாடாமல் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு வீட்டின் மேற்பக்க சுவற்றில் கண் பதித்திருந்தான்.

மாலையில் சந்தனா பாகேஸ்வரி, சஞ்சீவ், ஜனார்த்தனன், கல்பனா, வெண்மதி, இளமதி ஆகியோரிடம்
ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு
அவனிடம் மட்டும் பேசாமல் அலைபேசியை வைத்திருக்க பயல் முழுதாக அவளுடன் கனவுகளில் பாடல்களின் பேக்ரௌண்டுடன்
காதல் ரசம் சொட்ட உரையாடிக் கொண்டிருந்தான். அவனால்
இந்த தலைமுறையின் பாடல்களோடு மனதார ஒன்ற முடியவில்லை. அதனால் 80, 90 களின் பாடல்களை கேட்டுக் கொண்டு ஒருமாதிரியான மோன நிலையில் வீற்றிருந்தான்.

அவனது மடியில் கால் வைத்து வெண்மதியின் மடிமீது படுத்திருந்த இளமதியின் பிஞ்சுப் பாதங்களை மெல்லமாய் அழுத்தியபடியே கனவு கண்டு கொண்டிருந்தவனிடம்,

"பாஸ்..... இவள ஒழுங்கா உக்காந்து
வெளையாட சொல்லுங்க. கேம்ல கான்சென்ட்ரேட் பண்ணாம
சும்மா மேல சீலிங்க மொறச்சு பாத்துட்டு ஒக்காந்து இருக்கீங்க? நான் பாருங்க.... ஒத்தையாளா இந்த ரெண்டு கேர்ள்ஸையும் சமாளிச்சுட்டு இருக்கேன். அதுலயும் இந்த இளமதி.... குட்டிப்பாப்பா டைஸ ஒழுங்கா உருட்டிப் போடாம ரொம்ப சீட்டிங் பண்றா!" என்று கதிரிடம் புகார் ஒப்பித்தான் சஞ்சீவ்.

"மாமா! உங்க ப்ரெண்டு
என்னை தித்துதான்! பாப்பா சீத்திங் பண்ணல மாமா.....!" என்று கதிரிடம் சொன்னவள் பொங்கிய சினத்துடன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now