இந்த ஒரு விஷயத்திற்காக தான் மிகவும் பயந்து போய் இருந்தான், சந்தனா இப்போது பேசியதைப் போலவே தான் அவள் வாயில் இருந்து வார்த்தை வர வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.
அவனது எண்ணம் போலவே அவளும் பேசி முடித்ததும் கதிருக்கு திடீரென அவ்வளவு குதூகலம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவளுக்கான அறையில் அவன் பார்த்து பார்த்து அவளுக்காக வாங்கி வைத்த மெத்தையையும், சுகமான தூக்கத்திற்கு உதவும் ப்ளாங்கெட்டையும் விட அவள் மிருதுவாக இருந்தாள்.
அவனது இத்தனை வருட பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் உடைத்து சந்தனா அவனுக்கு மோகத்தை விதைத்துக் கொண்டிருந்தாள்.
"கல்யாணத்துக்கு முன்னால உன்னோட சூபொவோட நீ காட்டுற இவ்வளவு நெருக்கம் ரொம்ப தப்புடா கதிரேசா....!" என்று அவனது மூளை எடுத்துரைத்த அறிவுரைகளை எல்லாம் அவனது மனம் தூக்கிப் போட்டு உதைத்து விட்டு அவளுடைய தேகத்துடன் ஒட்டிக்கொண்டது.
அவன் இதழ்கள் அவள் முகமெங்கும் ஒரு இடம் விடாமல் ஊர்ந்து கொண்டிருக்க, அவள் உடல் மீது அவன் கொடுத்த அழுத்தத்தில் கதிர் தந்த முத்தங்களுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்ந்து சந்தனாவின் காதிற்குள் சென்றது.
சந்தனாவின் நிலைமையோ வண்டின் வாயில் சிக்கிக் கொண்ட பூவின் நிலை போல் இருந்தது. தன்னை மொய்க்கும் வண்டு மகரந்தத்தையும், தேனையும் தன்னிடமிருந்து எடுப்பதை பூவால் எப்படி தடைசெய்ய முடியாதோ, அப்படித்தான் கதிரின் செயல்களையும் சந்தனாவால் தடை செய்ய முடியவில்லை.
அவளுடைய பிடிவாதம், கோபம், ஆளுமை இவை அனைத்தும் அவன் தன்னை அணைக்கும் வரையில் தான்! இடையை இழுத்து தன்னருகில் அணைத்தான் என்றால் உலகம் முழுக்க மங்கலாகிப் போன உணர்வு தான் அவளுக்கு!
அவனைப் போல் அவளும் அவனது தோள்களையும், புஜங்களையும், கன்னத்தையும், கண்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவைகளை முத்தமிட்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
Romanceமிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல்...
❤ சிறுநகை 57
Start from the beginning