❤ சிறுநகை 54

375 33 7
                                    

"ஆன்ட்டி..... வேணாம் ஆன்ட்டி! நீங்க அங்கிள்ட்ட எதுவும் பேச வேணாம்!" என்று பாகேஸ்வரியிடம் சொல்லி அவசரமாக எழுந்தவளை மறுபடியும் கையைப் பிடித்து இருக்கையிலேயே அமர்த்தியவன்,

"ஏய்....... சும்மாயிரு லஷ்மி! எங்கம்மா இப்ப கொஞ்ச நாளா தான் அந்த ஆள எதித்து கேள்வியே கேக்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுலயும் இன்னிக்கு சஞ்சீவோட அம்மா பேசுற மாதிரியே பாயிண்டா பேசுறாங்க. எங்க அம்மாவுக்கு இப்டியெல்லாம் பேசத் தெரியுமான்னு நெனச்சு நானே வாயப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா
இதப் போயி வேண்டாங்குறியே? அம்மா பேசுங்கம்மா! உங்க மனசுக்குள்ள இருக்குற ஒரு கேள்வியையும் உட்டுடாதீங்க! எல்லாத்தையும் அந்த ஆள்ட்ட கேளுங்க; சேகர் நீ ஏன்டா அங்க நின்னுட்டு இருக்க? கால் வலிக்கப் போவுது...... இங்க வந்து ஒக்காரு வா!" என்று ஜெபாவையும் அழைத்து தன்னுடைய இடப்புறத்தில் அமர வைத்துக் கொண்டான் கதிர்.

"ஏ.... பாகேஸூ! என்......னடீ? ஆத்தாளுக்கும், புள்ளைக்கும் என்னையப் பாத்தா அவ்ளோ எகத்தாளமா தெரியுதுல்ல?
புள்ள வீட்ல வந்து வசதியா ஒக்காந்துருக்கோம்,
புதுசா வேலைக்கு எல்லாம் போக ஆரம்பிச்சுர்க்குறோம், அங்க மொதலாளியா வேற இருக்கோம்னு நெனைப்பு வந்து
திமிராகிடுச்சாடீ ஒனக்கு? நிறைய பேசுற! அதுவும் எங்கிட்டயே தைரியமா பேசுற!" என்று இளக்காரமான ஒரு பார்வையுடன் கேட்டவரிடம்,

"ஒங்க கிட்ட பேசுறதுக்கு தைரியத்துக்கு என்னங்க கொறச்சலு? இதுநாள் வரயில எனக்குப் பேசத் தெரியாமயெல்லாம் நான் உங்ககிட்ட பொறுமையா போய்ட்டு இருக்கல; அப்பன் புள்ளைக்குள்ள ஏற்கனவே இருக்குற மனஸ்தாபம் நானும் பேசுறதால பெரிசாகிடக் கூடாதேன்னு தான் உங்க பேச்சுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருந்தேன்......!"

"எப்ப நீங்க உங்க இஷ்டத்துக்கு எம்புள்ள, எம்மருமக, அவ குடும்பத்துல இருக்குறவங்க, சஞ்சீவ் தம்பின்னு எல்லார் மேலயும் சகட்டுமேனிக்கு வார்த்தையால சேத்த அள்ளிப் போட ஆரம்பிச்சிட்டீங்களோ,
இனிமேலும் என்னால அமைதியா வாய மூடிக்கிட்டு இருக்க முடியாது பார்த்துக்கங்க.....!" 

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now