❤ சிறுநகை 49

328 33 5
                                    

"ஹவ் இஸ் திஸ் பாஸிபிள்?" என்று கேட்டபடி குழப்பத்துடன் தலையின் இருபுறமும் கையைத் தாங்கிப் பிடித்திருந்தவனைப் பார்த்து சிரிப்பு வந்தது குணாளினிக்கு!

ஒரு பெண்ணுடனான முத்தத்திற்கு பிறகு இயல்பாக ஒரு ஆணுக்கு குதூகலம் வரலாம்; இல்லை இந்த முத்தத்தை இங்கயே முடித்து விடக் கூடாது என்ற புது வைராக்யம் வரலாம்! இவன் என்னடாவென்றால் ஏதோ குணாளினி தான் அவனை மடக்கி முத்தத்தாக்குதல் நடத்தி விட்டாள் என்று யோசிப்பவன் போல "இது எப்டி நடந்துச்சு?" என்று கேள்வி கேட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"ஏனுங்க மாமோய்! இப்பவாச்சு வெளிய போகலாமுங்களா?" என்று கேட்டவளிடம்,

"ஏய்.... காட் டேம்! உனக்கு ஒரு கன்ஃப்யூஷனும் இல்லையா? நமக்குள்ள இது எப்டி.... இப்டி ஸடனான்னு ஒரு கேள்வியும் வரலயா?" என்று பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

"கேள்வி கேட்டாப்ல? எவ்ளோ அறிவாளித்தனமா நா உங்கிட்ட கேள்வி கேக்குறனோ, அதுக்கு தக்கன எனக்கு நீ ப்ரைஸூ எதுவும் குடுக்கப்போறியா? செய்யுற லவுட்டையெல்லாம் செஞ்சுப்புட்டு என்னா மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு நிக்குற நீயி.....? பொச்சு பொச்சுன்னு நெத்தியில,  ஒதட்டுல ஒதட்ட வச்சு ஒத்தியெடுத்து இப்ப கெரக்கம் கண்டவன் மாதிரி தலையவா பிடிச்சுக்கிட்டு ஒக்காந்துருக்க! எந்திரிச்சு வாடா; நம்மள காணும்னு எல்லாரும் பாத்துக்கிட்டு கெடப்பாங்கல்ல?" என்று அவனிடம் சொன்னாள்.

"ஏய்......! சும்மா போலாம், போலாம்னுட்டு..... நான் உங்கிட்ட பேசிட்டு இருக்கனுல்ல? அத முடிச்சுட்டுப் போவம் அதுவரைக்கும் பேசாம நில்லு; 
நான் உங்கிட்ட எப்டி இவ்ளோ ஈஸியா மிங்கிள் ஆனேன்னு எவ்ளோ யோசிச்சாலும் எனக்குப் புரியலடீ!" என்று மெதுவான குரலில் சொன்னவனின் அருகில் சென்று அவனை ஒட்டி அமர்ந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள் குணாளினி.

"என்ன தான் உனக்குப் பிரச்சன? கொஞ்சமுன்னால நடந்தது புடிச்ர்ந்துச்சுங்குறியா இல்ல புடிக்கலங்குறியா? எதுக்கு இப்டி குழம்பி தவிக்குற?" என்று அவன் தோளில் கை போட்டு அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள் சஞ்சீவின் வருங்கால மனைவி.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now