❤ சிறுநகை 45

396 30 14
                                    

"மிஸ் சந்தனா! நான் லன்ஞ்ச் ப்ரேக்ல இருக்கேன். இப்ப நான் ஃப்ரீயா தான் இருக்கேன்..... ஆனாலும் உங்க கிட்ட பேசுற மூடு எனக்கு சுத்தமா இல்ல! ஸோ உங்க கிட்ட பேசணும்னு எனக்கு தோணுறப்போ நானே உங்களுக்கு கால் பண்றேன்!" என்று சொன்ன சஞ்சீவிடம்,

"நீ என்ன மூடுல வேணா இரு..... லன்ஞ்ச் சாப்டு, சாப்டாம போ! பட் இப்ப எங்கூட நீ பேசியே ஆகணும் சஞ்சீவ்! நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு உன் வேலையப் பாரு; கதிருக்கு அவனோட லைஃப்ல இருக்குற பெரிய ஆம்பிஷன் என்ன? அவங்கிட்ட கேட்டா என்னை கல்யாணம் பண்ணிக்குறது தான் அவனோட ஆம்பிஷென்னு சொல்றான்! நீதான அஞ்சு வருஷமா அவங்கூடவே இருந்துருக்க! ஸோ அவனோட ஆசை, தேவை, கனவு இப்டி ஏதாவது விஷயம் இருந்துருக்கும்ல? அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்!" என்று பதவிசான குரலில் கேட்டாள் சந்தனா.

"அவரோட ட்ரீமப் பத்தியெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க மிஸ்.சந்தனா? வேற வேல இல்லையா உங்களுக்கு? நாங்க இத்தன வருஷத்துல எங்க ரெண்டு பேருக்குள்ள நிறைய பெர்சனல் மேட்டர்ஸ ஷேர் பண்ணியிருக்கோம். அப்போ எல்லாம் அவர் உங்கள பத்தி எங்கிட்ட மூச்சு கூட விடல.....! நீங்க அவரப் பாக்க வந்ததுக்கப்புறம் தான் உங்களப் பத்தி கொஞ்சம் சொன்னாரு. அதக்கேட்டதும் எனக்கு எரிச்சல் தான் வந்துச்சு! அவரோட அப்பா அம்மாவ நாகர்கோவிலுக்கு கூட்டிட்டு வந்த
பிறகு கூட அவர் உங்க வீட்டுக்கு வந்து பேசுறதுக்கு பயப்படுறாரு! அவர் எந்த சிச்சுவேஷன்லயும் சந்தானலஷ்மிய மிஸ் பண்ணவே விரும்பல..... நான் அவரோட இடத்துல இருந்துருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா.....?"

"என்னைய இத்தன டார்ச்சர் பண்ணுன உன் முன்னால இப்ப எப்டி நான் கெத்தா வந்து நிக்குறேன் பாருன்னு ஒருதடவயாவது உங்க கிட்ட சொல்லிக் காட்டியிருப்பேன்! அவரு அதையும் செய்யாம லவ் இல்லாம வாழ்க்கையில ஒண்ணுமில்ல; என்னோட சந்தானலஷ்மியில்லாம எனக்கு வாழ்க்கையே இல்லன்னு பொலம்பிக்கிட்டு இருக்காரு. அவருடைய காதலுக்கு நீங்க எந்த விதத்துல தகுதியானவங்க மிஸ். சந்தானலஷ்மி?" என்று கேட்டான் சஞ்சீவ்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now