❤ சிறுநகை 40

430 30 10
                                    

உன்னுடைய மனக்கலக்கத்திற்கு எல்லாம் என்னிடம் வேலையே இல்லை என்று சொல்லும்படி அவளிடம், "ஒரு நிமிஷம்டா லஷ்மி! இப்ப வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டுப் போனவன், டீவியை அணைத்து விட்டு, அந்த ஹாலின் விளக்கையும் அணைத்து, இரவு விளக்கை போட்டு விட்டு, ஜெபா மற்றும் தனக்குமாக சந்தனாவின் படுக்கையில் இருந்து முடிந்த அளவு தள்ளி படுக்கையை போட்டு விட்டு மறுபடியும் அவளுடைய படுக்கையில் வந்து ஒண்டிக் கொண்டான்.

அதற்குள் சந்தனா தன்னுடைய அலைபேசியில் அவன் ஏற்கனவே கேட்ட பாடலை ரிப்பீட் மோடில் ஓட விட்டிருந்தாள். இதுவரை மனம் சற்று உற்சாகமாக இருந்தால் ஏதாவது ஒரு பாடலை வாயில் முணுமுணுப்பாள் அவ்வளவு தான்..... ஆனால் இன்று இந்த
ஒருபாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியதன் காரணம் தெரியவில்லை.

ஆளை முன்னும் பின்னும்
ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு
இங்கு சோதனை
தேடும் இன்னும் இன்னும்
நூறு வண்ணம் வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை

என்ற வரிகளைக் கேட்ட போது பாயில் கிடத்திய அவளுடைய தேகத்துடன் ஒட்டிக் கொண்டு கிடந்தான் கதிரேசன். சற்று நேரத்திற்கு முன்பாக தணிந்து அணைந்திருந்த மோகம் இப்போது அவர்களுடைய இரண்டு தேகத்தின் தொடுதலால் பொசுக்கென்று புதிதாய் புறப்பட்டது.

கைகள் பட்டு பட்டு
ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே
பெண்மை கட்டுப்பட்டு
நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே

"ஏய் ரேஷன்.... கிஸ்ஸூக்கு மட்டும் ஏன்டா ஸ்டாப் சொல்ல மாட்டேங்குற? இப்டி கல்யாணத்துக்கு முன்னால
ஏகப்பட்ட கிஸ் குடுத்துக்கிட்டா நம்ம கற்பு கரைஞ்சு போயிடாதா?" என்று கேட்டவளின் தலையில் கொட்டியவன்,

"கற்பு என்ன கற்பூரமாடீ..... காத்துல கரைஞ்சு காணாம போறதுக்கு? இந்த முத்தமெல்லாம் உனக்கு நான் சின்ன வயசுல குடுக்கணும்னு நினைச்சு பத்திரப்படுத்தி வச்சுருந்தது தெரியுமா?" என்றவனிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now