❤ சிறுநகை 38

667 30 10
                                    

தன் கன்னத்தில் யாரோ விரலால் மென்மையாக வருடுவது போன்ற உணர்வில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக இந்த ஜெபா என்னை எதற்காக எரிச்சல்படுத்துகிறான் என்று நினைத்து மெதுவாக தன் கண்களைத் திறந்த சந்தனா தன் முகத்திற்கெதிராக போர்வைக்குள் இருந்த கதிரின் முகத்தைப் பார்த்து விட்டு "ஆ......பூ...ச்சா......ண்டி!" என்று கத்தினாள்.

"என்னது.... பூச்சாண்டியா? ஏன்டீ ஃபெதரு.... இதெல்லாம் உனக்கு அடுக்குமாடீ? ஓரளவுக்கு ஹாண்ட்சம்மான ஒரு பையன் பெட்ஷீட் போத்திக்கிட்டு நம்ம பக்கத்துல படுத்துருக்கானே? அவன ஹாய் எப்ப வந்தீங்கன்னு கேப்போம்..... இல்ல வாங்க வாங்க உங்கள தான் காணும்னு பாத்துட்டு இருந்தேன்னு சொல்றியா?"

"எம்முகத்த பாத்து பயந்து மெரண்டு போய் பூச்சாண்டின்னு கத்துற..... நீங்க மட்டுந்தான் பெட்ஷீட்ட  பொத்திக்கிட்டு ஹைட் அண்ட் சீக் வெளையாடுவீங்களா? ஏன் உங்க கேம்ல நாங்களும் வரக்கூடாதா?" என்று கேட்டவனை முட்டியால் அடிவயிற்றில் ஓங்கி ஒரு எத்து விட்டாள்.

எதிர்பாராத அவளது தாக்குதலில் கலங்கியவன், "ஆ......ம்மா!" என்று முணக, அவனது கத்தலை கொஞ்சங்கூட பொருட்படுத்தாமல் அவனிடம்,

"பண்டாரம்! பாதி தூக்கத்துல வந்து கன்னத்த சொரண்டிட்டு....  அடுக்குமாடி, மொட்டமாடின்னு பெனாத்திக்கிட்டா இருக்க?
எழுந்திரிடா முதல்ல!" என்று சொன்னாள்.

"அடியே வீம்பம்மா..... எதுவா இருந்தாலும் வாயால பேச வேண்டியதுதானடீ ! கழுத மாதிரி எதுக்கு வயித்துல உதையுற? எனக்கு ரொம்ப வலிக்குது! படத்துல ஜெயம்ரவியெல்லாம் அவரோட லவ்வரோட வீட்ல ஓட்டப் பிரிச்சு கயித்துல தொங்கி பாட்டுப் பாடிட்டே லவ் பண்ணுனாரு! நான் என்ன அதெல்லாமா செஞ்சேன்? உம்பக்கத்துல சும்மா படுக்கத்தான செஞ்சேன்? அதுக்குப்போயி இந்த உதை உதைப்பியா சூனியபொம்ம......!"

"சுனாமி, புயல்,  நிலநடுக்கம் இதெல்லாம் வரும் போது எப்டி பாதுகாப்பா உயிர் தப்பிக்கணுமோ அதே மாதிரி உம்பக்கத்துல வரும்போதும் நான் பாதுகாப்பா உயிர் தப்பிக்குறத பத்தி யோசிக்கணும் போலிருக்கே.... என்னா ஒத? அ.....ம்மா! ஐயோ......ம்மா.... ஏய் பிசாசே; வலிக்குதுடீ! ஆஆஆ... என்னை யாராவது காப்பாத்துங்களேன்!" என்று கத்திக் கொண்டிருந்தான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now