❤ சிறுநகை 37

387 30 8
                                    

"இங்க ஒருத்தன் ஒத்தையாளா நின்னுக்கிட்டு அல்லாடிக்கிட்டு கெடக்கேன்! ஒரு பேச்சுக்குன்னாலும் உனக்கு சமையல்ல ஏதாவது ஹெல்ப் பண்ணவான்னு கேக்குறாளான்னு பாரு! சரி, இன்னிக்கு காலைல இருந்து நமக்காக அவ செஞ்சுவச்ச
சூனியமே ரொம்ப ரொம்ப பெரிசுதான்......!" 

"என்ன ஒண்ணு! அவ நமக்குன்னு வச்ச சூனியத்துல எங்கப்பன் வந்து அவகிட்ட வாண்டடா சிக்கிக்கிட்டான்; அதுனால ஒண்ண தொட்டு ஒண்ணுன்னு நிறைய நல்லது வேற நடந்துடுச்சு...... இந்த அளவுக்கு போதும்டா கதிரு! நம்ம ஃபெதரு கொஞ்சநேரம் ஜாலியா வெளையாடட்டும்!" என்று சொன்ன அவனது மனசாட்சியின் பேச்சைக் கேட்டவன் அவளிடம் எப்போதடா தனிமையில் பேச நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"ஹே கிட்டோஸ்.... என்னோட இன்னொரு பேரென்ன தெரியுமா? சாண்டல் சாத்தான்! உங்கள பிடிச்சு, அப்டியே ரெண்டா ஒடைச்சு, வாய்ல போட்டு அரைச்சு சாப்ட்டு பெரிசா ஏப்பம் விடப் போறேன் பாருங்க..... ஹாஹாஹா! ஐ'ம் கம்மிங் ஃபார் யூ!" என்று சிறுமிகளிடம் சொன்ன சந்தனா அறையில் ஒரு போர்வையை முழுதாக அவளது தலையிலிருந்து கால் வரை தெரியாமல் போர்த்திக் கொண்டு தன்னுடைய முகமே தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

"இந்த ஹைட் அண்ட் சீக் விளையாட்டு நல்லாவேயில்ல சந்தனாக்கா! நாம வேற விளையாட்டு விளையாடுவோம்! இப்டி முகத்த மூடிட்டு நின்னீங்கன்னா, நீங்க எங்கயாவது இடிச்சுக்கப் போறீங்க! அப்புறம் நாங்க தான் உங்கள முட்ட வச்சுட்டோம்னு கதிர் மாமாட்ட சொல்லக் கூடாது!" என்று சொன்ன வெண்மதியைப் போலவே இளமதியும்,

"ஆமா சொல்லக்கூடாது!" என்றாள்.

"ஏன் வொய்ட்! உனக்கு இந்த விளையாட்டு பிடிக்கலையா? சரி வாங்க! நாம போய் உங்க கதிர் மாமாவையே டிஸ்டர்ப் பண்ணுவோம்!" என்று அவர்களிடம் சொன்ன சந்தனா சிறுமிகள் இருவரையும் அவர்கள் அறையிலிருந்து கிச்சனுக்குள் அழைத்துக் கொண்டு வந்தாள்.

"மிஸ்டர் கதிர்ரேஷன் எங்க மூணு பேருக்கும் போரடிக்குது! எங்கள கொஞ்ச நேரம் நீங்க எண்டர்டெயின் பண்றீங்களா?" என்று கேட்டவளை ஒற்றை கையை இடுப்பில் வைத்து முறைத்தவன்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now