❤ சிறுநகை 34

377 28 8
                                    

"ஹலோ மிஸ்டர் ஆர்ட்டிஸ்ட்; நீ கையப் பிடிச்சிக்கிட்டு எங்கிட்ட ரொமான்ஸ் பண்ணதெல்லாம் போதும்! கைய விடு..... ஆன்ட்டியும், ஜெபாவும் எப்ப வேணும்னாலும் உள்ள வரலாம்!" என்று சொன்னவளை கிண்டலாக ஒரு பார்வை பார்த்து உச்சுக்கொட்டியவன்,

"த்த்சு! த்த்சு! த்த்சு.......! என்ன அடக்கம்டா சாமி? ஆன்ட்டி வந்துரப் போறாங்க; கைய உடுங்குற? யாரப் பாத்தும் நீயா பயப்படுறவ? இங்க வந்துருக்குறது இது தான் மொததடவ.... ஆனாலும் வந்தவுடனே எங்கப்பங்காரன் கிட்ட போயி வம்பிழுத்து அவன வீட்ட விட்டே ஓட வச்சுட்ட!"

"நேர்ல பார்க்குறப்ப நீ கேட்டத தர்றேன்னு சொல்லிட்டு, எங்கையில தனியாவே மாட்டாம உந்தம்பியையும் உனக்கு வால் பிடிச்சுட்டு அலையச் சொல்லியிருக்க! அவன் என்ன உனக்கு தடுப்புச்சுவரா? அவனத் தாண்டி நான் உங்கிட்ட வர முடியாதாக்கும்? இந்தா இப்ப உன்னைய தனியா உட்டுட்டு எங்கம்மா பின்னாலயே ஓடிட்டான்!

"இப்ப உங்கைய பிடிச்சுட்டு இருக்குற நான் உன்னைய கட்டிப்பிடிச்சா நீ என்ன பண்ணுவ?" என்று அவளிடம் கேட்டு வலம் இடம் என மாற்றி மாற்றி கண்சிமிட்டினான் கதிர்.

"கட்டிப்பிடிச்சா எதுவும் பண்ண மாட்டேன். நேத்து நைட் கார்ல நான் ஒம்மடியில படுத்ததும் நல்லா தூஙகிட்டேன். நீ சரியா தூங்குனியா இல்லையா ரேஷன்?" என்று கேட்டவளை உலக அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் வியந்து பார்த்தவன்,

"பார்றா.... நம்ம சூபொ தானா இவ? அக்கறையான விசாரிப்பெல்லாம் பயங்கரமா இருக்கு? ஒன்னைய மடியில படுக்க வச்சதுக்கப்புறம் நான் எப்டி லஷ்மி நிம்மதியா தூங்க முடியும்? என்னை அறியாம ரெண்டு மூணு தடவ தூங்கி விழுந்தது தான்..... ஒன்னையே தான் பாத்துட்டு ஜெபா கூடயும் அப்பப்ப பேச்சு குடுத்துட்டு வந்துட்டு இருந்தேன்!" என்று சொன்னவனிடம்  உச்சுக்கொட்டியவள்,

"கஷ்டமா இல்லையாடா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்.

"இல்லவே இல்லையே!" என்று இருபுறமும் தலையை ஆட்டியவன் மறுபடியும் அவளைப் பார்த்து தன் கண்களை சிமிட்டினான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now