❤ சிறுநகை 32

366 24 2
                                    

சந்தனா, ஜெபா இருவருமாக சேர்ந்து கதிரை சென்னையிலுள்ள அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அவனை இங்கே அழைத்து வந்தனர் என்ற வார்த்தையை வெறும் அலங்காரத்திற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்! மற்றபடி காரில் அவனது இருக்கைக்கு பக்கவாட்டில் சந்தனாவும், முன்னால் ஓட்டுநர் இருக்கையில் ஜெபாவும் அமர்ந்து கொண்டு அவனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு தான் இங்கு வந்திருந்தனர்.

காரில் அவளுடைய இடுப்பைக் கட்டிக் கொண்டு மார்பில் முகம் சாய்ந்தவனை முறைத்தவளிடம்,

"என்ன இப்டி டெரர் லுக் உடுற? நீதான என்னைய வலுக்கட்டாயமா புடிச்சு காருக்குள்ள அடைச்சு சென்னைக்கு இழுத்துட்டுப் போற! அப்ப நான் என் இஷ்டப்படி தான் காருக்குள்ள படுத்துட்டு வருவேன்!" என்று சொன்னான்.

"கதிர்ணா..... நீங்க படுக்குறதுன்னா காரோட ஸீட்லயே சாய்ஞ்சு படுக்க வேண்டியதுதான? ஏன் சந்துவப் போட்டு ஜுஸ் பிழிஞ்சுட்டு இருக்கீங்க? அவளுக்கு இப்டி யாரும் மேல ஒரசுனாலே பிடிக்கவே பிடிக்காது!" என்று மெதுவான குரலில் பேசிய ஜெபாவிடம்,

"நான் இவள ஒரசுறது பிடிக்கலையின்னு இவ எங்கிட்ட சொல்லட்டும் சேகர்! அப்புறம் பாத்துக்குறேன்! நீ வண்டிய கேர்புல்லா ஓட்டு!" என்று அவனிடம் சொன்னவன் சந்தனாவிடம் எங்கே
நான் உன் மார்பில் கிடப்பது பிடிக்கவில்லை என சொல் பார்ப்போம் என்று அவளுக்குப்
பார்வையால் சவால் விட்டான்.

"நல்லா தூங்குற வரைக்கும் இப்டி ஒக்காந்துக்க! அதுக்குப்புறம் வண்டிய நிறுத்தி ஒன்னைய டிக்கிக்குள்ள தூக்கிப் போடுறேன் இரு!" என்று மெல்லிய குரலில் அவனிடம் சொல்லிப் பல்லைக் கடித்தவளிடம்,

"ச்சே.... ச்சே! நீ அதுக்குல்லாம் சரிப்பட்டு வர மாட்டடா செல்லம்; எங்கைய தூக்கக்கூட ஒனக்கு சத்து பத்தல..... நீ எங்க மொத்தமா நம்மள தூக்குறது? காமெடி பண்ணாத சூபொ!" என்று சொல்லி விட்டு வாகாக அவளது மார்பில் ஒண்டிக் கொண்டான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now