❤ சிறுநகை 30

Start from the beginning
                                    

"ரேஷன் நான் இப்பல்லாம் அப்படியில்ல.... ரொம்ப மாறிட்டேன் தெரியுமா? கோபம் வந்தாலும், ரூமுக்குள்ள போயி அமைதியா பில்லோவ கட்டிப் புடிச்சுக்கிட்டு ஒக்காந்துக்குவேன். முன்ன மாதிரி கண்ண மூடிட்டு கத்துறதெல்லாம் இல்ல!" என்று ஒரு குற்றஉணர்வுடன் அவனிடம் பேசினாள் சந்தனா.

அவளை தன்னுடைய வார்த்தையால் காயப்படுத்தி விடக்கூடாது என்று எவ்வளவு முயன்றாலும், இப்படி ஒரு சில வேளைகளில் அவனையும் மீறி வன்மமாக ஏதாவது பேச்சு வெளிப்பட்டு விடுகிறது என்று நினைத்த கதிர் பெருமூச்சுடன் அவளிடம்,

"வயசு ஏற ஏற கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தா சரிதான்! ஒருதடவ ரூமுக்குள்ள போயிட்டு ஐஸ்கட்டிய வெளிய எடுத்துட்டு அப்புறம் வந்து எங்கிட்ட
என்னமோ கேக்கணும்னு சொன்னியே அதக் கேளு!" என்றான்.

சந்தனா அறைக்குள் செல்ல நினைத்த போது அவளிடம்,

"லஷ்மி..... அந்த ஐஸ்கட்டி ரெண்டையும் எங்கிட்ட தர்றியா? அதுக்கு முத்தம் குடுக்கணும்!" என்று ஒருமாதிரியான குரலில் சொன்னவனிடம்,

"ச்சீ.....ச்சீ! பொறுக்கி; இரு ஒன்னைய ஆன்ட்டி கிட்ட சொல்லிக் குடுக்குறேன்!" என்று திட்டி விட்டு உள்ளுக்குள் சென்று ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள் சந்தனா.

"எங்க லஷ்மி நான் கேட்டத?" என்று இன்னமும் அடங்காமல் அவளுடைய வெறுங்கையை பார்த்தவனிடம்,

"வாஷ்பேஷின்ல தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்! ஒனக்கெல்லாம் அது கிடைக்காது!" என்று சொன்னாள் சந்தனா.

"சரி போவுது விடு. ஏதோ சொல்லணும்னியே அத சொல்லு!" என்று கேட்டவனிடம் தயங்கியபடி,

"இல்ல கதிர்..... நம்ம தான் இன்னுங்கொஞ்ச நாள்ல மேரேஜ் பண்ணிக்க போறோமே? அதான் பாகேஸ்வரி ஆன்ட்டிய நீ இங்க கூட்டிட்டு வந்துட்டா நல்லாயிருக்குமேன்னு சொல்லலாம்னு நினைச்சேன். இங்க நீ இருக்குற வீடு கம்பர்டபிளா தானே இருக்கு? ஸோ அவங்கள இங்க கூட்டிட்டு வர்றதுல உனக்கு எதுவும் பிரச்சனை இருக்காதுல்ல?"

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now