❤ சிறுநகை 30

347 25 2
                                    

"சந்தோஷமா இருந்தா தான் நீ கேக்குறத செஞ்சு குடுப்பேன்னு இல்ல லஷ்மி! சும்மாவே கூட செய்வேன்! என்ன வேணுமோ கேளும்மா!" என்று மெதுவான குரலில் அவளிடம் சொன்னான் கதிர்.

"டேய் ரேஷன் உனக்குள்ள வயலண்ட், சைலண்ட்னு ரெண்டு மோடு இருக்கா என்னடா? கழுத்து நரம்பு புடைக்குற அளவுக்கு கத்தவும் செய்ற! இப்டி காதுக்கே கேக்காத மாதிரி பேசவும் செய்ற! நம்மளால எல்லாம் இப்டி நேரத்துக்கு ஒருமாதிரி இருக்க முடியாதுப்பா!" என்று அவனிடம் சொன்ன படி தரையில் இல்லாமல்  அந்தரத்தில் இருந்த காலை ஆட்டிக் கொண்டிருந்தவளிடம்,

"அதிசயமான அதிசயமா எங்கிட்ட ஸாரியெல்லாம் கேட்டியே லஷ்மி? அதுக்கு நீ சொன்ன மாதிரி என்னோட சைலண்ட் மோடு ஸ்டைலுல நான் ஒரு சர்ப்ரைஸ் குடுக்கட்டுமா ஒனக்கு?" என்று கேட்டவன் அவளது அருகில் சிரிப்புடன் நெருங்கி அவளுடைய முதுகுப்புறத்தில் உடையை லேசாக விலக்கி இரண்டு ஐஸ் க்யூப்களை அவளது உள்ளாடைக்குள் போட்டு விட்டு குறுஞ்சிரிப்புடன் டேபிளில் அமர்ந்து கொண்டான்.

"ஏ.......ய்! இடியட்; வர வர ஒனக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு!" என்று சொன்னவள் உச்சுக்கொட்டியவாறு முதுகிற்குள் குளிர்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தாள்.

உடையை சற்று நெகிழ்த்தினால் தான் ஐஸ்கட்டிகள் கீழே விழும்..... ஆனால் இவன் முன்னால் எப்படி உடையை நெகிழ்த்துவது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் பாதங்களை வருடியவன் அவளது உள்ளங்காலை தன்னுடைய தொடையில் வைத்துக் கொண்டான்.

"என்னோட ஸ்வீட் சூபொ இன்னிக்கு ரொம்ப ஜில்லுன்னு ஒரு மூட்ல இருந்த மாதிரி தெரிஞ்சது. அதான் அவங்கள இன்னுங்கொஞ்சம் ஜில்லுன்னு ஆக்குவோமேன்னு இப்டி செஞ்சேன்!"

"நான் என்ன நேரத்துக்கு ஒருமாதிரி இருக்குறேன்.....? மனுஷங்கன்னா மூடுக்கு ஏத்த மாதிரி மாறத்தான் செய்வாங்க..... ஆனா உனக்குத் தான் உன் மூடு லேசுக்குள்ள மாறவே செய்யாது! எப்போ பாத்தாலும் ஏன் வருது, எதுக்கு வருதுன்னே தெரியாம வர்ற அர்த்தமில்லாத கோபம் தான்
உனட்ட இருக்குற மோடு! உன்னை மாதிரியே என்னையும் கண்ண மூடிட்டு கத்த சொல்றியா? அதெல்லாம் என்னால முடியாது!
எப்பவும் ஒரே மாதிரி இருக்க நான் என்ன களிமண்ணுல செஞ்சுவச்ச பொம்மையா?" என்றான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now