❤ சிறுநகை 26

395 30 2
                                    

"என்னடா.... இவ இப்ப வரைக்கும் நம்ம ஆசைக்கு கேட் போடாம அவ பாட்டுல நின்னுக்கிட்டு இருக்காளேன்னு நினைச்சேன். கரெக்டா கேட்ட போட்டியா நீயி? சரி..... திடீர்னு முளைச்ச முத்த ஆசையில்லாம, என் மனசுல ரொம்ப வருஷமா இருந்த ஆசையாவது நிறைவேறுச்சே? அதுவே போதும்! வா; கல்யாணத்துக்கு அப்புறம் மேடம் எந்த ரூம்ல இருக்கப் போறீங்க? அத முதல்லயே சொல்லிட்டேன்னா, உனக்குத் தேவையான மாதிரி நான் அந்த ரூம்ல எல்லாத்தையும் செட் பண்ணனும்!" என்று சொல்லி அவளை தன்னுடைய வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றான் கதிர்.

"கல்யாணத்துக்கு அப்புறம் யூஸ்யுவலா கப்பிள்ஸ் ஒரே ரூம்ல தான இருப்பாங்க? இவன் எதுக்கு நம்மள எந்த ரூம்ல இருக்கப்போறன்னு கேட்டு மேல கூட்டிட்டுப் போறான்?" என்று யோசித்த படியே அவனுடன் படியேறியவள்,

"ஏய் ரேஷன் உன்னோட பெட்ரூம் எது? அத எங்கிட்ட காட்டவேயில்லயே?" என்று அவனிடம் கேட்டபடி மாடிக்கு ஏறி வந்தாள்.

"என்..... பெட்ரூமுக்குள்ளயா......? நீ இப்பவே அங்க வரணுமா லஷ்மி? மத்த ரும்ஸ எல்லாம் பாரு. என் பெட்ரூம இன்னொரு நாளைக்கு பொறுமையா பார்த்துக்கலாமேம்மா?" என்று தயங்கிய படி பேசியவனை நேர்ப்பார்வை பார்த்து முறைத்தவள் அவனிடம்,

"என்னடா பண்ணி வச்சிருக்க உள்ள? மரியாதயா இப்பவே என்னைய உன் ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போ!" என்று கேட்டாள்.

"சரி வா போவம்!" என்று சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து அறையின் கதவை நன்றாக திறந்து வைத்து விட்டு சந்தனாவை உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். 

அறையைத் திறந்ததும் அறைக்கதவுக்கு நேர் எதிராக நான்கு பெரிய வார்ட்ரோப்கள் இருந்தன. அறையின் மூன்று பக்கச் சுவரில் ஒருபுறம் இரண்டு
பெரிய ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களுக்கும் நடுவில் இருந்த
ஒரு சுவரில் ஒரு மிக்கி மவுஸூம், அதனுடைய கேர்ள்ப்ரெண்ட் மின்னி மவுஸூம் கைகோர்த்து சிரித்தபடி நடந்து கொண்டிருந்தன. 

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now