❤ சிறுநகை 25

436 29 1
                                    

"நீங்க ரெண்டு பேரும் பெரிய இவிங்களோ..... கடையோட மொதலாளி யாருன்னு தெரியாம இருக்குறது அங்க வேலை பார்க்குறவங்களோட தப்பா? எதுக்கு எல்லாரையும் அந்த ட்டூத் பேஸ்ட் ஷாஷே அப்டித் திட்டுனான்? என்னைய வேற இர்ரெஸ்பான்ஸிபிள்னு திட்டுனான்.....! என்னிக்காவது கையில மாட்டுனான்? அவனுக்கு மண்டையிலயே கொட்டு விழும்; சொல்லி வை அவங்கிட்ட!" என்று சொன்னவளை சாந்தப்படுத்தும் வகையில் இருவரின் ஸீட் பெல்ட்டையும் கழற்றி விட்டு
அவளை லேசாக அணைத்து இதமாக புன்னகைத்தவன்,

"இல்லடா செல்லம்! அவன் ஏற்கனவே எங்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணுன க்வாலிட்டியில ஆளுங்கள வேலைக்கு சேர்க்க முடியலைன்னு சொல்லிட்டு இருந்தான்! இன்னிக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததால வச்சு எல்லார் மேலயும் ஏறிட்டான்! அவ்ளோதான்!"

"நீ என்ன மாதிரி கதை சொல்லியிருந்தாலும் அந்த மேனேஜர் திருப்பி உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டுருக்கணும் இல்லையா? சரி இதெல்லாம் ஒரு அனுபவத்துல சேர்த்தி தான? விடு பாத்துக்கலாம்! சஞ்சீவ் சார்பா நான் உங்கிட்ட ஸாரி கேட்டுக்குறேன். கோபத்த விட்டுடுங்க சார்ஜி!" என்று சொன்னவனிடம் முடியாதென தலையை ஆட்டி விட்டு முனைத்துக் கொண்டாள் சந்தனா.

"ஒனக்கு உம்மேல கூடத்தான் கோபம் ரேஷன்..... வேற உருப்படியான வேல எதுவும் பாக்காம, எப்போ பார்த்தாலும் ஒண்ணு நீ எம்பின்னாலயே சுத்திட்டு இருக்க; இல்ல என்னை உன் பின்னால சுத்த வச்சுட்டு இருக்க! யாரைக் கேட்டு அங்க ஜ்வல்லரியில என்னை உன் ஃபியான்ஸின்னு சொன்ன?" என்று அவனிடம் கேட்டபடி காரிலிருந்து இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து பொரிந்து கொண்டிருந்தவளை காரின் ஸீட்டில் இருந்து இடையைப் பற்றி வெளியே இழுத்தவன்,

"ஃபியான்ஸின்னு சொன்னதெல்லாம் தப்புன்னு சொல்லி என்னால உங்காழுல விழ முடியாது லஷ்மி! நீ சும்மா எல்லாத்துக்கும் கோபப்பட்டா பட்டுக்கிட்டே இரு! ஆனா எங்கூட வீட்டுக்குள்ள வந்துரு தங்கம்!" என்று சொல்லிக் கொண்டே
அவனது வீட்டிற்குள் குண்டுகட்டாக அவளை தூக்கிச் சென்றான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now