❤ சிறுநகை 22

380 26 0
                                    

"உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு எம்மனசுல இருக்குறது எல்லாத்தையும் என்னால பேச முடிக்க முடியாது போலிருக்கு சேகர்! அதுனால நானும், ஆலென் ஸாரும் என் வீட்டுக்கு கிளம்புறோம். நீயும், உங்க அக்காவும் போய் படுங்க. நாளைக்கு காலையில நான் ஆலென் ஸார இங்க கொண்டு வந்து விட்டுடுறேன்!" என்று சொன்னவனிடம் உச்சுக்கொட்டிய சந்தனா,

"யேய் என்னடா நீ.....? உன் இஷ்டத்துக்கு எல்லார்ட்டயும் ஆர்டர் போட்டுட்டு இருக்க? ஆலென் உங்கூட உன் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாரா? அவர்ட்ட கேக்காம எதுக்கு நீயா எல்லாத்தையும் முடிவு பண்ற? நாளைக்கு காலையில அவர் வேலைக்குப் போக வேண்டாமா?" என்று கதிரிடம் கேட்க அவன் எரிச்சலடைந்த குரலில்,

"ஸார் அவரோட வேலைக்கு ஒருநாள் லீவ் போட்டாருன்னா அதுல ஒண்ணும் குறைஞ்சு போய்டாது! நீ போய் தூங்கு போ!" என்று அவளிடம் சொன்னான்.

ஆலென் தனது மகளையும், மகனையும் சமாதானம் செய்து வைத்து விட்டு கதிருடன் அவன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். வீட்டின் காம்பவுண்ட் கதவை சாற்றிக் கொள்வதற்காக வந்த ஜெபா கதிரின் கார் வரை வந்து நிற்க அவன் கையில் மறக்காமல் ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்து அனுப்பினான் கதிர்.

"கதிர்ணா! உங்க ரெண்டு பேருக்குள்ள லவ்னு நீங்க மட்டுந்தான் சொல்றீங்க.....! ஆனா பாக்குற எங்களுக்கு அப்டியெல்லாம் ஒண்ணும் இருக்குற மாதிரி தெரியல! முதல்ல அவ உங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னா! இப்ப நீங்களும் கல்யாணத்த பத்தி பேசணும்னு சொல்லிட்டு ஆலென உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறீங்க!
இதெல்லாம் நீங்க எதுக்காக செய்றீங்கன்னு புரியல கதிர்ணா!" என்று வண்டியில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவனிடம் சொன்னான் ஜெபா.

"ஒனக்குப் புரியலன்னா பரவாயில்ல சேகர்! நான் என்ன பேசப் போறேன்னு ஸாருக்கு புரிஞ்சுருக்குன்னு நெனக்குறேன். எங்கிட்ட எதுவுமே கேக்காம எம்பக்கத்துல வந்து அமைதியா ஒக்காந்துருக்காங்க பாரு! ஒண்ணும் கொளப்பிக்காம போய் தூங்குப்பா! நாங்க நாளைக்கு காலையில சீக்கிரமா வந்துடுறோம்!" என்று அவனிடம் சொன்னான் கதிர்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now