❤ சிறுநகை 18

397 30 3
                                    

"நீ இல்லாம இனிமே நா தனியாவே சுத்திக்கிட்டு இருக்கணும்டா தம்பி! அத நினைச்சா தான் எனக்கு கடுப்பாகுது!" என்று சொன்ன கதிரிடம் பெயருக்கு ஒரு புன்சிரிப்பை உதிர்த்த சஞ்சீவ் கதிரிடம்,

"இப்ப யாரு உங்கள தனியா சுத்த சொல்றாங்க? பேச்சுலர் லைஃபுக்கு ஒரு புல்ஸ்டாப்ப வச்சுட்டு, பேமிலிமேன் ஆகிட வேண்டியதுதான? அப்டி செஞ்சுட்டா அப்புறம் எதுக்கு நீங்க தனியா இருக்கப் போறீங்க....?

"சரி..... அம்மா என்ன சொன்னாங்க? என்னை தனியா கழட்டி விட்டுட்டுப் அவங்க கூட பேசப்போன விஷயத்த பத்தி மூச்சே விட மாட்டேங்குறீங்க?" என்று கேட்க வந்த கோபத்தில் கட்டிலில் காலடியில் கிடந்த தலையணையை தன் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த சஞ்சீவின் முகத்தை குறிபார்த்து உதைத்தான் கதிர்.

தன் முகத்தில் படும்படி வந்த தலையணையை சரியாக கேட்ச் பிடித்த சஞ்சீவ் கதிரிடம்,

"பேசுங்கன்னு சொன்னா பில்லோவ தூக்கிப்போட்டு விளையாடிட்டு இருக்கீங்க? கோபமா இருக்கீங்களா?" என்று கேட்டான்.

"ஆமாண்டா லூசுப்பயலே.... உங்கம்மாட்ட பேசுங்கன்னு போகச் சொல்லி என்னை அவங்கட்ட
நல்லா மாட்டி உட்ட நீ; அவங்க நம்ம சரக்கடிக்குறதை பத்தியெல்லாம் கேட்டு எங்கிட்ட விஷயத்த போட்டு வாங்கிட்டாங்கடா; நாம போட்ட ப்ளான் எதுக்குமே அவங்க சரின்னு சொல்லல! 31 வயசுல உழைக்கிறதுக்கு உனக்கு என்ன கேடுன்னு ரொம்ப டீசண்டான வார்த்தையால திட்டுனாங்க ஆனாலும் எனக்கு உங்கம்மாவ ரொம்ப பிடிச்சிருக்குடா தம்பி!"

"இவங்கள மாதிரி எங்கம்மாவும் போல்டா இருந்துருந்தா எங்கப்பன செவுட்டுலயே ரெண்டு போட்டு, மரியாதயா எங்கயும் பொறுக்கப் போவாம வீட்லயே கெடன்னு சொல்லியிருப்பாங்க. எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்துருக்கும். சரி உடு! அப்பப்ப இத வேற பொலம்பி இனிமே என்ன ஆகப்போகுது? டின்னர் சாப்ட்டுட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்டா தம்பி. நீ உங்க வீட்ல இருக்குற எல்லார்ட்டயும் நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு; ஏன்னா சாப்டப் போற நேரம் யார் யார பாக்க முடியுமோ தெரியல.....!" என்று சொன்ன கதிரிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now