❤ சிறுநகை 10

579 33 9
                                    

"இங்க பாரு லஷ்மி; உங்கம்மாவோட இயல்பு ஒங்க எல்லோரோட நிம்மதியையும் கெடுக்குதுன்னு தெரியுதுல்லம்மா? ஏன் நீங்க எல்லாரும் சேர்ந்து உக்காந்து அவங்ககிட்ட இதெல்லாம் புரிய வைக்க முயற்சி பண்ணக்கூடாது?"

"அவங்க கேக்குற நேரத்துல கேக்குறதெல்லாம் குடுக்குறது ரொம்ப தப்பான விஷயம்மா! ஆலென் ஸாருக்கு கூட இது ஏன் புரிய மாட்டேங்குது?" என்று அவளிடம் மெதுவான குரலில் கேட்டவனை ஸோஃபாவிலிருந்து முகம் தூக்கிப் பார்த்து விட்டு,

"இங்க வா மேன்.....!" என்று கட்டளைக்குரலில் அழைத்தாள் அந்த அடங்காப்பிடாரி.

"நீ வான்னு கூப்டா நான் ஒடனே ஒங்கிட்ட ஓடி வரணுமா? அதெல்லாம் இப்ப வரமுடியாது போடீ! உள்ள வந்ததும் என்னமோ நாந்தான் உந்தம்பிக்கு கஞ்சா வாங்கிக் குடுத்த மாதிரியில்ல அந்தக் கத்து கத்துன..... இப்ப எதுக்கு என்னை பக்கத்துல கூப்டுற?" என்று அவளிடம் கேட்டு முனைத்துக் கொண்டான் கதிர்.

"நீ இன்னமும் என்னோட ஸ்லேவ் தான்! முன்னாடியெல்லாம் என்னை நீ இப்டி ரொம்ப உரிமையா சந்தானலஷ்மின்னோ, லஷ்மின்னோ கூப்ட மாட்ட! எப்டி கூப்டுவன்னு தான் இப்ப
வரைக்கும் நியாபகம் இருக்குதுல்ல உனக்கு?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்,

"ம்ம்ம்..... நல்லா! இப்ப ஒருக்க அத செஞ்சு காட்டணுமா ஒனக்கு?" என்று கேட்டு தன் முதுகை வளைத்து குனியப் போனவனை அவசரமாக கையாட்டி தடுத்தவள், அவனை தன் அருகே வருமாறு கண்ஜாடையால் அழைத்தாள்.

கட்டளைக் குரலுக்குக் கட்டுப்படாமல் சிலிர்த்துக் கொண்டவன் இப்போது அவள் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு அவளருகில் சென்றான்.

தன்னுடைய துண்டை எடுத்து ஒரு ஓரத்தில் போட்டவன், ஸோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து கொள்ள அவனுடைய அருகில் வந்து ஸோபாவில் அமர்ந்து கொண்டு, அவனது இடையைச் சுற்றி தன் கைகளைக் கோர்த்து அவனது தொடையில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள் சந்தனா.

மிக நீண்ட அவளது பெருமூச்சை தன்னுடைய தொடையில் உணர்ந்த கதிர் அவளுடைய ஸ்பரிசத்தால் சிலிர்த்துப் போனான். சந்தனாவின் மூச்சுக் காற்று பட்டு அவன் தொடையில் இருந்த மொத்த பூனை முடிகளும் தொன்னூறு டிகிரியில் சிலிர்த்துக் கொண்டு நின்றன.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now