❤ சிறுநகை 9

599 32 2
                                    

கதிரேசன், சஞ்சீவ், சேகர் மூவரும் இரவு எட்டு மணியளவில் ஒரு பெரிய ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்தனர். சஞ்சீவினுடைய தாத்தா உடல்நலக் குறைவால் அன்று மரணமடைந்து இருந்தார்; அதனால் அவருக்குப் பிறகு இவன் தொழிலை கவனித்துக் கொள்ள அங்கே வேண்டும் என்று நினைத்த அவனது அன்னை அவன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அவனை திருப்பி அழைத்திருக்கிறார்கள்; நான் இரண்டு நாட்களில் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று கதிரிடம் அலைபேசியில் சொல்லியிருந்தான் சஞ்சீவ்.

சஞ்சீவை பார்க்க கேலரிக்கு சென்று கொண்டிருந்த கதிர் "இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்பணும் பாஸ்!" என்று அவன் சொன்ன வார்த்தையில் மிகவும் சங்கடமாகி,

"நம்ம எப்பவும் போற ஹோட்டலுக்கு வந்துடு சஞ்சீவ்! நம்ம அங்க உக்காந்து பேசுவோம்!" என்று சஞ்சீவிடம் சொல்லி விட்டு ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டலின் முன்னால் தன்னுடைய வாகனத்தை பார்க் செய்த போது அங்கே எதேச்சையாக சந்தனாவின் தம்பி சேகரையும் பார்த்த கதிர் அவனோடு பேசிக் கொண்டிருந்தான்.

"சேகர்..... நீ சேகர் தான? நல்லா வளந்து இப்ப ஒரு மேன் ஆகியாச்சு.... ஹூம்! நல்லாயிருக்கியாப்பா? நீ எங்கடா இங்க? அதுவும்..... நீ இந்த ட்ரெஸ்ல?" என்று ஒரு தர்மசங்கடமான கேள்வியை அவனிடம் கேட்டு விட்டோமோ என்ற மலைப்பில் நின்று கொண்டிருந்த கதிரிடம் ஆச்சரியமான பாவத்துடன்,

"நீங்க எம்மேல கோபமா இல்லையா கதிர்ணா? பாத்தவுடனே எம்பக்கத்துல வந்து ரெண்டு அறை அறையப் போறீங்கன்னு நினைச்சேன்; நீங்க என்னடான்னா எனக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க!"

"நா இங்க பார்ட் டைமா டெலிவரி பாயா வொர்க் பண்றேன் கதிர்ணா; வீட்ல யாருக்கும் தெரியாது; அப்பா, சந்துவுக்கு எல்லாம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. பட் பணமும் நிறைய தேவைப்படுதே..... என்ன பண்றது? அத விடுங்க! வாங்களேன், நாம பேசிட்டே ஏதாவது சாப்டலாம்! இன்னிக்கு என்னோட ட்ரீட்!" என்று சொல்லி புன்னகைத்தவனின் தலைமுடியை வாஞ்சையாக வருடிய கதிர் அவனிடம்,

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now