❤ சிறுநகை 7

595 36 1
                                    

அன்று மாலை ஏழு மணியளவில் கதிரேசன் சந்தனாவின் வீட்டைத் தேடி வந்தான். தன்னுடைய மனைவியிடம் சற்றுநேரம் கொஞ்சம் அமைதியாக இரு என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்ட ஆலென் தன் வீட்டிற்கு வந்திருந்த உறவினனை வரவேற்றார்.

அங்கங்கே நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறப் பூக்களிட்ட ரவுண்ட் நெக் லாங் மேக்ஸி ஒன்றை அணிந்திருந்தாள் சந்தனா.

வீட்டுக்குள் இலகுவான அணிவதற்கென்றால் இந்த வகையிலான உடை சவுகரியமானது தான்...... ஆனால் அவளது மார்பு வரை சரியாக மூடியிருந்த உடையின் லேஸ் அவளுடைய வழவழப்பான கைகளை மூடாமல் விட்டது தான் அந்த உடையில் இருந்த தவறு!

"அப்பாவும், தம்பியுமா ரெண்டு ஆம்பளைங்க வீட்ல இருக்காங்க தான? அவங்க முன்னால இப்டி என்னையப் பாரு, எங்கையப் பாருன்னு காட்டிக்கிட்டு ட்ரெஸ்ஸூ போட்டு இருக்காளாம் ட்ரெஸ்ஸூ! இருடீ..... என் வீட்டுக்கு வந்த பெறகு இந்த மாதிரியெல்லாம் ட்ரெஸ்ஸ போட்டுட்டு சுத்து! கத்திரிக்கோல எடுத்து சைடுல கிழிச்சு உடுறேன்..... உன் ட்ரெஸ்ஸ!" என்று கொதித்து பொங்கிக் கொண்டிருந்தவனிடம்,

"டேய் கதிரு..... அவ எங்கடா உன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தா? உங்க அடுத்த மீட்டிங்கயெல்லாம் நான் இன்னும் ப்ளான் பண்ணவே இல்லயே..... அதுக்குள்ள நீ ஏன் ஓவரா பொங்குற? ஆலென், ஜெபா ரெண்டு பேரும் அவள நீ பாக்குற மாதிரி வித்தியாசமா எல்லாம் பாக்கல..... காமால உன் கண்ணுல மட்டுந்தான் தம்பி இருக்குது!" என்று கதிருக்கு அறிவுரை சொன்னாள் இந்தக் கதையின் ரைட்டர்!

"வைஷூ அக்கா! நீங்க எதுக்கு எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வர்றீங்க?  எங்க சண்டைய நாங்க பாத்துக்குவோம்; வீணா நீங்க இதுக்கு உள்ளல்லாம் வராதீங்க!" என்று அழுத்தக்குரலில் சொன்னவனை,

"என்னமும் செஞ்சு தொலைங்க பக்கிகளா!" என்று திட்டி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பி விட்டாள் வைஷூ. 

இடுப்பை கச்சிதமாக பிடித்திருந்த உடையை இன்னும் அழகாக்க கோபத்துடன் தன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து இப்போது மறுபடியும் அவள் மேல் காதல் வயப்பட்டான் கதிரேசன்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now