❤ சிறுநகை 3

1K 46 7
                                    

"ஐயயோ......டேய் தம்பி; அவ இன்னிக்கும் இங்க வந்துட்டாடா! எப்டியாவது அவ உள்ள வராம அவள வெளியவே நிப்பாட்டுடா தம்பி!" என்று தன்னுடைய ஸ்கிரீனில் வெளியே நிற்கும் அவளைப் பார்த்து விட்டு
பயப்படுபவன் சஞ்சீவின் லேசர் கண்களுக்கு இந்த முறையும் மிகப் புதியவனாகத் தெரிந்தான்.

"என்னடா அவள வெளிய பத்துன்னு சொன்னா, என்னைய பாத்து குர்ன்னு மொறைக்குற?" என்று கேட்ட கதிரிடம்,

"அப்ப எனக்கு தெரியாத ரகசியம்னு ஒரு விஷயம் உங்க கிட்ட நிச்சயமா இருக்குதுல்ல பாஸ்? அத எப்ப எனக்கு சொல்லப் போறீங்க? மிஸ் சந்தனாவ பாத்து ஏன் இப்டி பயப்படுறீங்க?" என்று கையை கட்டிக் கொண்டு கதிரிடம் கேள்வி கேட்டான் சஞ்சீவ்.

"..................ஷப்பா! டேய்; நீ எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்குற நேரத்துல அவ செக்யூரிட்டிய தாண்டி உள்ள வந்துரப் போறாடா; அவளப் பத்தி எல்லாத்தையும் ஒங்கிட்ட அப்புறமா சொல்றேன்; நீ நல்லாயிருப்ப...... மொதல்ல போய் அவள நிப்பாட்டு!" என்று சொன்னவன் சஞ்சீவ் அவனை ஒருபார்வை பார்த்து விட்டு நகன்றதும்,

"என்ன திமிருடீ ஒனக்கு? கொஞ்சங்கூட பயமில்லாம
என்னைய தேடிக்கிட்டு இன்னிக்கும் இங்கயே வந்துருக்க? எங்க போனாலும் நீ விடாம எம்பின்னாலயே வந்தா, நான் எங்க தான் போயி என் வேலையப் பாக்குறது?" என்று சீசீடீவி கேமிராக்கள் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டர் மானிட்டர் திரையைப் பார்த்து அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

வாய் அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த போதும் இரு கண்கள் முழுக்க அவள் நின்று கொண்டிருந்த ஒரு சீசீடீவி திரையின் காட்சியை மட்டும் ஸும் செய்து பார்த்துக் கொண்டிருந்தது.

"வாயி..... வாயி; அப்ப இருந்து இப்ப வரைக்கும் நீ கொஞ்சங்கூட மாறவேயில்லடீ; உன்னைய உள்ள உடலயின்னு செக்யூரிட்டி கூட ஏன்டீ சண்டைக்குப் போற?" என்று கேட்டு அவளை மறுபடி கண் இமைக்காமல் பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தான் கதிரேசன்.

"நல்லவேள.... ஆளுதா ஒல்லி கேட்டகிரில இருந்து கொஞ்சம் பூசுன மாதிரி ஆகியிருக்கா.... ஆனா மொகம் இன்னும் மாறாம அப்டியே தான் தான் இருக்கு!" என்று நினைத்துக் கொண்டான்.

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔Where stories live. Discover now