✨திருடியே மேரி மேரி மீ -1✨

147 6 2
                                    

வாசகர்களுக்கான முக்கியமான குறிப்பு: தயவு பண்ணி லாஜிக் பாக்குற யாரும் இந்த ஸ்டோரியை படிக்க வேணாம்... ஜஸ்ட் ஒரு இமேஜினேஷன் ஸ்டோரி.. கற்பனையா மட்டும் தான் இது இருக்க போகுது இதுல போய் லாஜிக் பாக்காதீங்க ஒன்லி மேஜிக் மட்டும் பாருங்க... அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு நான் எழுதி முடித்து இருக்குற ஸ்டோரி ..குறைகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻🙄

*உ*

" டேய் டுமாங்கோலிஆளுக்கு ஆயிரம் ரூபா பங்கு போடலாம்னு சொல்லிட்டு இங்குட்டு வந்து பிளேட்ட மாத்தி என்னடா என்கிட்ட ஐநூறு ரூபா கொடுக்க? என்கிட்டயே லவ்ட்ட பாக்குறியா?"என்று அந்தக் கூட்டத்தில் கோபத்துடன் ஒருத்தி கத்திக் கொண்டிருக்க,

கூட்டத்தில் இருந்து மற்றவர்கள் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். பின்னே அவள் கையில் பளபளப்பாக இருந்த கத்தி எந்த நிமிடம் அந்த குட்டிப் புலியை கிழிக்குமோ என்று பயம் அவர்களுக்கும் இருக்கும் தானே!

"எக்கி எப்ப பார்த்தாலும் பொருள பொருள வெளியே எடுக்காத உள்ளாக்க வை.. எசக்கு பொசக்கா அவன் மேல கீச்சுப்புட்டா என்னாகுறது"என்று கூட்டத்தில் சற்று உயரமாக இருந்த அந்த நெட்டையன் நெப்போலியன் குரல் கொடுக்க,

அவனைப் பார்த்து நன்றாக முறைத்தவள்,
"போனது எந்துட்டு தானே? அப்ப நல்லாத்தான் வக்கனையா பேசுவ.. உந்துட்டு போன உனக்கு தெரியும் பே.. நான் என்ன டைம் பாஸுக்கா சண்டை போட்டுட்டு இருக்கேன் இந்த கம்மனாட்டி ஒழுங்கா என் கையில பைசா கொடுத்து இருந்தா எப்பவோ எடத்த காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பேனே என் வென்று"என்று அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த குட்டிப்புலியை முறைக்க,

குட்டி புலி பயத்துடன், "அக்கா உங்காசு 500 ரூபா தானே? கணக்குப்படி தானே தந்தேன்?"

"டேய் டேய் என் கோபத்தை கெளராத? நீ என்கிட்ட ஆயிரம் ரூபா தானே டீலு பேசினே.. இப்ப அப்படியே அப்பாடிக்கா பேசுற.. என்னை ஏமாத்த பாக்குறியா? என்ன பத்தி உனக்கு தெரியும் தானே?"

திருடியே! மேரி மீ! மேரி மீ!Where stories live. Discover now