23 வைஷாலியின் தந்திரம்

1.4K 86 9
                                    

23 வைஷாலியின் தந்திரம்

"நான் உங்க கூட ஆஃபீஸ்க்கு வரல. என்னை இங்கேயே இறக்கி விடுங்க. நான் ஆட்டோவில் போயிக்குறேன்" என்றாள் வைஷாலி.

"பாட்டியோட ஆளுங்க உன்னை ஃபாலோ பண்ணி வர வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதை செய்" என்றான் விக்ரம் கண்டிப்புடன்.

அவன் சொல்வது போல் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் சரி என்று தலையசைத்தாள் வைஷாலி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவுடன் நேரே தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் விக்ரம். வரவேற்பாளர்க்கு ஃபோன் செய்து, தன் அறைக்கு காபி அனுப்புமாறு பணித்தான். சிறிது நேரத்தில் அங்கே வந்தான் சுதாகர்.

"உங்க அம்மா, அப்பா, பாட்டியோட பாஸ்போர்ட் எல்லாத்தையும் ரினீவ் பண்ணியாச்சு. இதெல்லாம் அதுக்காக கொடுத்த எக்ஸ்ட்ரா ஜெராக்ஸ் காப்பி ப்ரூஃப்." அவற்றை மேசை மீது வைத்தான் சுதாகர்.

அவற்றை எடுத்து பார்வையிட துவங்கினாள் வைஷாலி.

"சுதா, நீ வீட்டுக்கு போகும் போது வைஷாலியை உன்னோட கூட்டிக்கிட்டு போ" என்றான் விக்ரம்.

"கண்டிப்பா... வேலையை முடிச்சுட்டு கூட்டிகிட்டு போறேன்..." அங்கிருந்து சென்றான் சுதாகர்.

"எல்லாரும் அப்ராட் போறாங்களா?" என்றாள் வைஷாலி"

"அம்மாவும், அப்பாவும் ஒவ்வொரு வருஷமும் என்னை அமெரிக்காவில் வந்து பார்க்கிறது வழக்கம். ஆனா, பாட்டி ஒரு தடவை கூட இந்தியாவை விட்டு வெளியே போனதே இல்ல. ஆனாலும் அவங்க பாஸ்போர்ட்டையும் ரினீவ் பண்ணி வச்சிவோம்."

" ஓ... "

சட்டென்று வைஷாலியின் கண்கள் விரிவடைந்தது. அப்பொழுது, விக்ரம் கேட்ட காபியுடன் உள்ளே வந்தாள் வரவேற்பாளர் பெண். விக்ரமின் கவனம், அந்த பெண்ணின் மீது சென்ற அந்த நொடி பொழுதில், அவனது மேஜை மீதிருந்த துண்டு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து எதையோ குறித்துக் கொண்டு, மீண்டும் பேனாவை மேஜை மீது வைத்தாள் வைஷாலி. அவள் செய்தது எதையும் தான் கவனிக்கவில்லை என்பது போல் சாவகாசமாய் காபியை பருகினான் விக்ரம். அவள் என்ன செய்வாள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். வைஷாலியும் காபியை பருகினாள்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Where stories live. Discover now