11 சின்ன முதலாளி

1.4K 91 13
                                    

11 சின்ன முதலாளி

"நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?"

தன்னிடம் கேட்கப்பட்டது எப்படிப்பட்ட கேள்வி என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை வைஷாலியால். வழக்கமாய், இப்படிப்பட்ட கேள்வி, நண்பர்கள் இடையில் கேட்பது தான் வழக்கம். பார்த்து வெகு நாளாகி விட்ட நண்பனை, *நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?* என்று விளையாட்டாய் நண்பர்கள் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியின் ஏஎம்டி, அப்படிப்பட்ட ஒரு கேள்வியை, தன்னிடம் வேலைக்கு சேர வந்த பெண்ணிடம் கேட்பது கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதது தானே?

சுதாகரும் கூட வைஷாலியை போலவே அதிர்ச்சியடைந்தான். விக்ரமை நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய அவனுக்கு, இப்பொழுது விக்ரம் என்ன விதத்தில் இந்த கேள்வியை கேட்டான் என்பது சுத்தமாக புரியவில்லை. *இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா?* என்ற கேள்வியை அவன் கேட்கிறான் என்றால், இந்தப் பெண்ணை விக்ரமுக்கு ஏற்கனவே தெரியுமா? ஆனால் எப்படி? அவன் இந்தியாவிற்கு வந்து ஒரு வாரம் தானே ஆகிறது? அதற்குள் இந்த பெண்ணைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியும்?

தன்னை, பேயைப் பார்த்து விட்டது போல பார்த்துக் கொண்டு நின்ற விக்ரமை, குழப்பத்துடன் பார்த்தாள் வைஷாலி.

"நான் உயிரோட தான் இருக்கேன். ஆனா, அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி.

"ஆனா எப்படி?" என்று அவன் குரலை உயர்த்த, அவள் சற்று பின் வாங்கினாள்.

சில அடிகள் எடுத்து வைத்து, அவளை வந்தடைந்தான் விக்ரம்.

"உனக்கு சரியாயிடுச்சா? ஆனா, பிரைன் டெட் ஆனவங்க க்யூர் ஆகவே மாட்டாங்கன்னு சொல்லுவாங்களே...? நீ எப்படி க்யூர் ஆன?"

இப்பொழுது சுதாகருக்கு புரிந்துவிட்டது இந்தப் பெண் யார் என்று. அவனுக்கும் ஆச்சரியமாய் போனது. மூளை சாவு அடைந்தவர்கள் குணமானதாய் சரித்திரமே இல்லையே. அப்படியிருக்க இந்த பெண் மட்டும் எப்படி அதிலிருந்து மீண்டாள்?

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Where stories live. Discover now