கைதி - அத்தியாயம் 7

78 6 3
                                    

S M Hospital - Ooty

ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் "மினி...." எனக் கத்த,

அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.

பிரணவ், "தாரா.." என அவளிடம் செல்லப் பார்க்க அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.

ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு.." என கோவமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.

பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.

மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.

ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,

பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,

"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்ப எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன...." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now