முல்லை: பார்க்கிறேன்..பார்க்கிறேன்.
மாமா...நவீன் அவங்க fb la friend request குடுத்துருக்காக? என்ன பண்ண?கதிர்: அதுக்குள்ள friend request ஆ?
முல்லை: ஆமா...அவங்க வீட்டுல என்னை நிறைய தடவை நம்ம சொந்த காரங்க கல்யாணத்துல பார்த்துருக்காங்க...நவீனுக்கு பிடிச்ச தால தான் அவங்க பொண்ணு கேட்டு பேசிருக்காக...அப்பாவும் அம்மாவும் அவங்க வீட்டெல்லாம் போய் பார்த்துட்டு வந்துட்டாக...அவங்க office க்கு கூட அப்பா போய் பார்த்துட்டு வந்துட்டாங்க..
அப்பா அம்மா நவீன் தான் முடிவே பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க மாமா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு...கதிர்: என்ன முல்லை சொல்ற...மாமா இதெல்லாம் சொல்லவே இல்லை...
முல்லை: நீங்க எழுந்து போன பின்ன அத தான் எல்லார்கிட்டயும் அன்னிக்கு சொன்னாங்க..அப்ப தான் எனக்கே தெரியும்...அம்மா நவீன் பத்தி தான் புகழ்ந்து பேசிட்டே இருக்காங்க...அவங்க அம்மாவும்.. அம்மா கிட்ட அடிக்கடி பேசுறாங்க...அப்பாவும் அடிக்கடி காரைக்குடி போறாரு...
கதிர்: இவன் என்னடி இவ்வளவு speed ஆ இருக்கான். எதுக்கு இவ்வளவு அவசர படுறான்.
முல்லை: நீங்க slow ஆ இருந்துட்டு அவன் speed ஆ இருக்கானு சொல்றீங்க...பாருங்க..நல்ல comedy..
கதிர்: Comedy ஆ இருக்கா டி உனக்கு...எனக்கு காண்டா இருக்கு?
அவன் friend request ல accept பண்ணாத...பார்த்துக்கலாம்...அப்புறம் ping பண்ணுவான்.முல்லை: வீட்டுல Photo பத்தி கேட்டுகிட்டே இருக்காங்க...பிடிக்கலைனு சொன்னா ஏன்னு கேட்பாங்க...இப்ப என்ன பண்றது?
கதிர்: இப்போ கல்யாணம் வேணாம் னு சொல்லு...
முல்லை: அதெல்லாம் சொல்லிட்டேன்...படிக்கனும் எல்லாம் சொல்லிட்டேன்...கல்யாணம் முடிச்சு படி னு சொல்றாங்க...நவீன் சரி னு சொல்லிட்டாராம்...காரைக்குடி தான அதனால பிரச்சனை இல்லைனு சொல்றாங்க...அப்பா வேற தனியா கூப்டு வச்சு ஒத்துக்க கேட்டுக்கிட்டே இருக்காங்க...எனக்கு என்ன பண்றதுனே தெரியலை...நேத்து அப்பாவே கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டாரு...என்ன நம்பு அம்மாடி னு பேச ஆரம்பிச்சிட்டாங்க கதிர்....எனக்கு அழுகையா வருது...