25. தீராதி:
அவனுடன் நடந்தவாறே ஆது " எங்க என்ன கூட்டீட்டு போற விஜய்... யார கேட்டு என்ன கடத்தீட்டு வந்த... என் துருவ்க்கு மட்டும் தெரிஞ்சா உன்ன அவன் சும்மா விட மாட்டான் தெரியும்ல... " என லௌட்ஸ்பீக்கர் போட்டதை போல் இவள் மீண்டும் கத்த... விஜயோ செவுடனுக்கு காதேது என்பதை போல் நடந்து கொண்டிருந்தான்...
ஆது " யு டெஃப்... உன் கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்... " என கத்தியதற்கும் அவனிடம் பதிலில்லை...
கோபம் தலைக்கேற அவன் முன்னால் வந்து வழியை மறைத்தவள் "அடுத்தவன் பொண்டாட்டிய கடத்தீட்டு போற அசிங்கமா இல்ல... " என கோவமாய் கத்த... முதலில் ஒன்றும் புரியாமல் முளித்தவன் பின்னே காதிலிருந்த பஞ்சை எடுத்துவிட்டு " திரும்ப சொல்லு " என்க... ஆதுக்கு கோவம் தலைக்கேறியது... இருந்தும் அவள் அதை மீண்டும் கூற... சாதாரணமாய் தோளை குலுக்கியவன்
விஜய் " என் அண்ணன் பொண்டாட்டிய தான கடத்தீட்டு போறேன்... அதுல தப்பில்ல... "
ஆது " என்ன திரும்ப கூட்டிட்டு போ... நா என் துருவ் கிட்ட போகனும்... நீ மட்டும் என்ன கடத்தினது அவனுக்கு தெரிஞ்சா உன்ன அவன் சும்மாவே விட மாட்டான் " என கை நீட்டி மிரட்டலிட... அதை பொருட்டாகவும் மதித்திடாதவன்...
விஜய் " உன்ன கடத்தி இரெண்டு மணி நேரமாச்சு... உன் துருவ்க்கு நா கடத்தீட்டேன் தெரியாமையா போக போது... தெரிஞ்சும் சும்மா தான இருக்கான்... " என இவளை ஏற்றி விடுவதை போல் பேச... முகத்தை சுருக்கி அவனை முறைத்தவள்...
ஆது " என் துருவ் என்ன வந்து கூட்டீட்டு போவான்... ... எனக்காக வருவான் " என முகத்தை மறு புறம் திருப்பி கொண்டாள்... இருந்தும் விஜய் அமைதியாகவே இருக்க மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள்
" என் துருவ் கிட்ட என்ன கூட்டீட்டு போ விஜய் " என தன்மையாய் கூற... இவ்வளவு நேரமும் பப்புவின் ஆதுமாவை தெரிந்தவள் அவன் ஆறு மாதமாய் கண்டு இரசித்த ஆதர்ஷினியாய் தெரிந்தாள்...
விஜய் " துருவ் துருவ்ங்காத ஆது... முதல்ல நீ என்ன தான் காதலிச்ச... நா தான் உனக்கு மெசேஜ் பன்ன... நியாபகம் இருக்கா " என முதலிலிருந்து தொடங்க...
ஆது " நிறுத்து விஜய்...உன் மெஸேஜ்ல ஈர்க்கப்பட்டேன்... அவ்ளோ தான்... கடைசி நாள் துருவ் மெசேஜ் பன்னப்போ என் பப்புவா இருப்பானோன்னு ஆச பட்டேன்... அதுல தான் துருவ விஜயா பாத்ததும் நா உணர்ச்சி வசப்பட்டேன்... " என தெளிவுற்றவளாய் கூறினாள்..
விஜய் " இல்ல ஆதுமா... அவன் உன்ன ஏமாத்திற்றுக்கான்... அவன் அப்ராட்ல அடிச்ச கூத்துலாம் தெரியுமா.. அதான் இப்டி அவன பப்புவா நெனச்சு நம்புர... சின்ன வயசுல இருத மாரியே இப்பவும் யாரும் இருக்கமாட்டாங்க... அவன் உன்ன காதலிக்கலவே இல்ல... என்ன பழிவாங்குரதுக்காக உன்ன யூஸ் பன்னிக்க நினைக்கிறான்... அவன நீ டைவர்ஸ் பன்னிட்டு என் கூட வந்துடு ... அவன் உனக்கு வேண்டாம்... உன்னயும் அவன் ஏமாத்திடுவான்.. நாம சந்தோஷமா இருக்கலாம்... அவன் ஒரு உமனைசர் " என்க இவ்வளவு நேரமும் கையை மூடி மூடி திறந்து தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டிருந்த ஆதுவின் கரங்கள் இப்போது விஜயின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது...
ஆது " இனஃப் விஜய்... என் துருவ பத்தி எதுவும் பேச தேவையில்ல... எனக்கு எல்லாம் தெரியும்... என் பப்பு சின்ன வயசுல இருந்த மாரியே இருந்தான்... என் புருஷன டைவர்ஸ் பன்ன சொல்ல நீ யாரு டா... அவன பத்தி என்ன தெரியும் உனக்கு... இனிமே என் புருஷன பத்தி வாய திறந்த.. " என கோவத்துடன் சிவந்த கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க எச்சரித்தவளின் மனமும் கத்தியை வைத்து கிழிப்பதை போல் வலித்தது... அன்று துருவை அவனிடம் உமனைசர் என கூறும் போது எத்துனை வலிகளை அனுபவித்திருப்பான் என்று....
விஜய் " எதுக்கு ஆது மா அவனுக்காக என்னையே அடிக்கிர... நா உன் இந்தர் "
ஆது " பிகாஸ் ஐ லவ் ஹிம்... ஐ லவ் ஹிம்.... என் துருவ் தான் என் இந்தர் நீ இல்ல விஜய்... " என கத்தியவளை பாவமாய் கன்னத்தில் கை வைத்து பார்த்து கொண்டிருந்தவனின் இதழ்கள் இப்போது அழகாய் விரிய... கண்கள் சிரிக்க அவளை நோக்கியவன் " இப்போ எல்லாத்தையும் நீ புரிஞ்சிக்கிட்ட ஆதுமா.. உன்ன ஆரம்பத்துல டிஸ்டர்ப் பன்னதுக்கு சாரி ... என் தப்ப நா உணர்ந்துட்டேன்... உன்னோட காதலையும் உணர வச்சிட்டேன்... இனிமே நிம்மதியா இருப்பேன் என் பின்னாடி வா " என அவளை தாண்டி முன்னே நடந்தான்...
வீடருகில் சென்றதும் கதவு திறக்க ஏனோ தானோ என நின்றிருந்த ஆதுவின் கண்கள் எதேச்சையாக கதவை திறந்தவரது பக்கம் திரும்ப கண்களில் இருந்த அலட்சியம் அந்த நொடி ஒழிந்து கொண்டு அதிர்ச்சியை அனுப்பி வைக்க அதன் பலனாய் அவள் கண்களிரண்டும் விரிந்து பார்ப்பதை உள்ளிழுக்க ஏற்றவாறு வழி செய்து கொடுத்தது.
முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நின்றது அவள் கணவன் துருவ்... அவனை கண்டவள் கண்களை திறந்து வைத்து கனவு காண... வெளியே வந்த துருவ் ஆதுவை தூக்கி சுத்தி கொண்டு " ஐம் சோ ஹப்பி மை டியர் பொண்டாட்டி ... ஐ லவ் யூ டூ டி " என கத்தினான்...
அவன் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவள் அவன் கழுத்தை கட்டி கொள்ள... சிரிப்புடன் வாயிற்கதவருகில் நின்ற விஜய்
விஜய் " டேய் அண்ணா... போதும் டா... வா உள்ள... காட்டு மிருகம்லாம் உன் சத்தத்துக்கு ஓடி வந்துடும் போல... " என நக்கலடிக்க.. ஆது விசித்திரமாய் நோக்கினாள்...
துருவ் " வரண்டா தம்பி... பொண்டாட்டிய கொஞ்சவிடேன்... "
விஜய் " உள்ள வந்து நாள் பூரா கூட கொஞ்சுடா.. யாரு உன்ன தடுக்கபோறா... இப்டி வெளிய நின்னு மானத்த வாங்காதடா.." என்கவும் ஆதுவை அப்பாடியே அழைத்து கொண்டு உள்ளே வந்தான் துருவ்...
துருவ் " ஏன் ஆதுமா இப்டி வெறச்சி நிக்கிர " என வினவ... அவளோ அண்ணன் தம்பி இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க... " உங்க பாசத்துல நாங்களே இன்னும் உறஞ்சு தான் இருக்கோம்... அவ எல்லாத்தையும் நேர்ல பாத்தவ.. அதிர்ச்சி இல்லாம இருக்குமா " என்ற குரலில் தலையை மட்டும் திருப்பியவள் ஏகத்துக்கும் அதிர்ந்தாள்...
அங்கு புன்சிரிப்புடன் நின்றிருந்தது விஜயின் மாதுமா...
விஜய் " என்ன அப்டி பாக்குறீங்க அண்ணி.. இவ தான் என்வைஃப் மாதுமா..." என மாதுவை தோளோடு அணைத்தவாறு கூற மாது அவனை காதலுடன் பார்க்க...
துருவ் " டேய்..." என இழுக்க...
விஜய் " வந்துட்டான்... உனக்கு பொருக்காதே... ஃப்யூச்சர் வைஃபுங்க அண்ணி " என விலகி நின்றவனின் தோளில் துருவ் கை போட்டு கொண்டு
துருவ் " என் தம்பி வைஃப் உனக்கு தங்கச்சி ஆதுமா " என அறிமுகப்படுத்தி வைக்க
விஜய் " ஆமா... இனிமே நாம ஒன்னாவே இருக்க போறோம்... " என கண்ணடித்து கூறிட... ஆது ஒன்றும் புரியாமல் முளிக்க " ரொம்ப வாய பிளக்காத டி... கொசு போய்ட போகுது " என அவள் தலையில் தட்டியவன் நவீன்...
ஆது " என்னாடா நடக்குது இங்க... தடம் படம் அருண்விஜய் மாரி அடிச்சிட்டு இருந்துட்டு இப்போ மாற்றான் பட சூரியா மாரி இருக்காங்க...
நவீன் : ம்க்கும் எங்களுக்கும் அதே அதிர்ச்சிதான்...
ஆது : ஆனா... இந்த ..பொண்ணு... என தினற...
மாது " கூல் ஆது... ஐம் மாதங்கி... நாம ஒரே மாரி இருக்கோம்... எப்டின்னு தெரியல... நா விஜயோட ஃபியான்சி... பயப்புடாதீங்க...
ஆது " நீங்க " என தோள் மேல் கை போட்டு நின்ற துருவ் விஜையை நோக்க...
துருவ் " காலைல வர நாங்களும் சண்டைல தான் இருந்தோம்... ஆனா உங்க இரெண்டு பேரையும் பாத்ததும் வேற உண்மைகளும்... உங்கள பத்தின உண்மைகளும் தெரிய வந்துச்சு ... அப்ரம்தான் விஜய் உனக்கு அவன் பன்னத புரிய வைக்கனும்னு உன்ன கூட்டீட்டு வந்தான்... நான் மாதுவ கூட்டீட்டு வந்தேன்"
விஜய் " எங்க அப்பா... எவ்ளோ கேடுகெட்டவர்னு இப்போ என்னால புரிஞ்சிக்க முடியுது... நல்லவருன்னு நம்புனேன்... அவரால துருவ வெறுத்தேன் ஆனா " என துக்கத்துடன் கூறியவனால் தொடர முடியவில்லை...
துருவ் " சாரி விஜய்... அவரு மேல இருந்த கோவத்த நா உன் கிட்ட காம்ச்சு உன் வாழ்கைல புகுந்துட்டேன்...
விஜய் " உண்மையாவே டிஸ்டர்ப் பன்னது நான் தான் டா ... என்ன மன்னிச்சிடு... "
துருவ் " தெரிஞ்சா பன்ன... விடுடா... இனிமே எப்பவும் உன்ன சந்தேகப்படமாட்டேன்டா... நாம பிரியவும் விடமாட்டேன்..." என அவனை தமையனாய் அணைத்து கொண்டான்... திடீரென சேர்ந்தபோதே இப்படி இருக்கிறார்களே பிறந்ததிலிருந்து ஒன்றாய் வளர்ந்திருந்தால் எத்துனை ஒற்றுமையாய் இருந்திருப்பர் என மற்றவர்கள் அவர்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் இவர்கள் பிரியவே கூடாதென்ற பிரார்த்தனையுடன் அவர்களை பார்த்து கொண்டிருந்தனர்...
மாது " அப்போ நீங்க இரெண்டு பேரும் சேந்துட்டீங்களா " ... என கேட்டதற்கு அஃப்க்கோர்ஸ் என்பதை போல் இருவரும் தலையாட்டினர்....
துருவ் " இத்தன நாளும் ஒருத்தர் மேல ஒருத்தர் கண்மூடித்தனமா நம்புன கோவத்தால இப்டி முட்டிக்கிட்டு இருந்தோம்... இப்போ தான் எல்லாத்துக்கும் எங்க அப்பன் தான் காரணம்னு தெரிஞ்சிடுச்சே..."
விஜய் "அதோட துருவ ஆது ஓட பார்வையில தப்பா காட்டனும்னு அவரு பன்ன வேலையெல்லாம் வெளிச்சத்துக்கும் வந்துடுச்சு... பெத்த தகப்பனா எங்க இரெண்டு டேருக்கும் அவரு பன்னதெல்லாமே துரோகம் தான்.... "
நவீன் "அதனால... "
துருவ் விஜய் " அண்ணன் தம்பி நாங்க ஒன்னா இனிமே அவருக்கு பாடம் புகட்ட போறோம்... " என கண்களில் உறுதியுடன் தலை நிமிர்ந்து ஒருசேர கூறினர்...
மாது " அப்டி மாமா உங்களுக்கு என்ன பன்னாரு... இப்டி நீங்க உடனே சேந்துட்டீங்க... "
துருவ் " அவரு பன்னதெல்லாம் கொஞ்ச நஞ்ச பவமில்லம்மா... எங்க அம்மாக்கள் இரெண்டு பேருமே அவரால தான் இப்போ இப்டி இருக்காங்க... விஜய் அம்மா வழி தாத்தா" என கூறி கொண்டிருக்கும் போதே விஜய் அவனை முறைக்க... அதை கண்டு அசடு வழிந்தவன்...
துருவ் " எங்க அம்மா வழி தாத்தா இவனுக்கு சின்ன வயசுல எழுதி வச்ச ஒரு பெரிய சொத்த அடையிரதுக்காக தான் இன்னையளவும் விஜய உயிரோட விட்டு வச்சிர்க்காரு... அந்த சொத்த அபகரிக்கிரதுக்காக என்ன விஜய்ன்னு நெனச்சு ஆதுவ விஜய் கூட அனுப்பி வச்ச கொஞ்ச நேரத்துல என்ன தாக்க ஆளு அனுப்ச்சு வச்சிர்க்காரு... " என கூறி முடித்ததும் ஆது அவனை அதிர்ச்சியுடன் நோக்க... அப்போதே கையிலிருந்த அவன் கட்டை கவனித்தாள் அவள்...
விஜய் " நா ஆதுவ என் தப்ப உணர்த்துரதுக்காக மட்டும் தான் தூக்கீட்டு வந்தேன்... ஆனா அப்போதான் துருவ் எனக்கு ஃபோன் பன்னி நடந்த தாக்குதல பத்தி சொன்னான்... இனி மேலும் நாங்க இரெண்டு துருவமா இருக்க வேண்டாம்னு முடிவெடுத்து ஒன்னு சேந்துட்டோம்.... " என சுருக்கமாய் கூறி முடித்தான்...
துருவ் " எங்கள பிரிச்சு வச்சா தான் சொத்தும் கிடைக்கும்... நாங்களும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிட்டு மடிவோம்னு நெனச்சி தான இவ்வளவையும் பன்னாரு... இப்போ நாங்க இரெண்டு பேரும் ஒருத்தரா ... ராஜபூபதியோட இரட்டை பேரனா நிக்கும் போது என்ன பன்னுவாருன்னு பாக்கலாம்.... " என கூறியவனின் பொருட்டில் விஜயை காமாட்சியின் தந்தையும் ஏற்று கொண்டார் என்றும் அவ்விருவருமே வாரிசு தான் என்றும் உறுதியளிக்க... அவன் கண்களிலும் அவரை தண்டிக்க வேண்டுமென்ற வெறி தென்பட்டது..
இருந்தாலும் ஒரு சிறிய சந்தேகம் ஒட்டி கொள்ள... அம்மூவருக்கும் தெரியவில்லை... இச்சகோதரர்கள் இனி மரணமே வந்தாலும் பிரியப்போவதில்லை என இறைவன் கணக்கிட்டுவிட்டார் என்று...
ஆது " ஐம் சாரி விஜய்... ஒரு கோவத்துல அடிச்சிட்டேன் " என நினைவு கூர்ந்து குற்றவுணர்வுடன் கூற...
விஜய் " ச்ச என்ன அண்ணி... இதெல்லாம் ஒரு விஷயமா... விடுங்க விடுங்க..." என சிரிப்புடன் தட்டிக்களிக்க...
துருவ் " என் பொண்டாட்டி விட்ட அறைல சித்தம் கலங்கீருக்குமே ... இப்போ தெளிவாச்சா ப்ரதர்... " என கேட்க...
விஜய் " ஹவ் ப்ரோ " என பாவமாய் பார்க்க...
துருவ் " வொய் ப்லட் சேம் ப்லட் " என அழுவதை போல் கூற ஆது அவனை செல்லமாய் முறைக்க... மாதுவும் நவீனும் சிரித்தனர்...
அப்போது ஆது " அது சரி எங்கள பத்தினது என்ன உண்மை " என கேட்டதற்கு ஆண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க... ஆதுவும் மாதுவும் அவரவர் காதலனை உறுதியுடன் உருத்து நோக்கினர்...
-----------------------------------------------------------
எழுத்தாளர்: தீராதீ (DhiraDhi)
ஐடி: adviser_98