நீயும் நானும்
Part - 4
முல்லை: உங்களை
நிறுத்துங்க
முல்லை:என்னாச்சு கதிர். ஏன் நிறுத்தனும். நா பேசரது பிடிக்கலையா😞
கதிர்:நீங்க என்ன சொல்ல போறீங்கனு. எனக்கு புரியுது முல்லை.
முல்லை:அப்புறம் என் நிறுத்த சொன்னீங்க
கதிர்:நீங்க அத சொல்ல வேணாம்
முல்லை:கதிர்....ஏன்.... என்ன பிடிக்கலையா
கதிர்:பிடிக்கல....
முல்லை:கதிர்😥
கதிர்:அத முதல நீங்க சொல்றது பிடிக்கல
முல்லை:அப்படினா
கதிர்:நாதான் முதல அத சொல்லனும்
முல்லை:😮
கதிர்:நீங்க வந்து propose பண்ற அளவுக்கு நா ஓசத்தி இல்ல. நாதான் உங்களுக்கு propose பண்ணனும் அத நீங்க accept பண்ணனும் அதுதான் சரி.
முல்லை:😍
கதிர்:முல்ல.....
முல்லை:இதுக்கு தான் என்ன சொல்லவிடாம பண்ணீங்களா.
கதிர்:☺️
முல்லை:நீங்க எனக்கு ஓசத்தி தான். நான் தான் propose பண்ணுவேன்.
கதிர்:நா தான்
முல்லை:இல்ல நாதான்
வாசகர் MV :வேற எதாவது கரடி வரதுக்குள்ள propose பண்ணி தொலைங்கடா.
கதிர்:முல்ல நீ என்ன வாழ்க்கை துணைவியாக வருவியா
முல்லை:என் முதலும் நீ தான் முடிவும் நீ தான். உன் முதலாகவும் முடிவாகவும் நான் மட்டும் இருக்க எனக்கு அனுமதி அளிப்பாயா கதிர்.
கதிர்: I love you 😘
முல்லை:I love u kathir
கதிர்:நம்ம love பண்ற விஷயம் வெண்ணிலாக்கு தெரிய வேணாம்.
முல்லை:ஏன் தெரிஞ்சா என்ன
கதிர்:அவ வீட்ல சொல்லிடுவா அவ ஒரு ஓட்ட வாய். அப்புறம் பிரச்சினை வரும். காலேஜ் முடியற வர சொல்ல வேணாம்.
முல்லை:ok. வெற்றிட சொல்லலாமா
கதிர்:கண்டிப்பா சொல்லனும் என் மச்சான் அவன். அவனுக்கு தெரியாம எப்படி
முல்லை:வெற்றி வீட்ல சொல்லமாடான
கதிர்:அவன் சொல்ல மாட்டான்.
முல்லை:ஏதோ சொல்ற சரி ok
நாட்கள் பறக்க காதல் பறவைகளும் காதலில் சுற்றி பறந்தன.
கதிர்:முல்ல காலேஜ் முடிஞ்சதும் நம்ப park la meet பண்ணுவோம்.
முல்லை:ஏன் திடீர்னு
கதிர்:இந்த வெண்ணிலாக்கு பயந்து நம்ப எங்கயும் போகல
முல்லை:நீயேன் அவளுக்கு ரொம்ப பயப்படுற
கதிர்:அவளுக்கு யாரு பயந்தா. அவ வாய்க்கு தான் பயம்.
முல்லை:சரி வரேன்.
மாலை பூங்கா.....
கதிரின் தோளில் சாய்ந்தவாறு பேசிக்கொண்டு இருந்தாள் முல்லை.
முல்லை: கதிர் நா ஒன்னு கேக்கவா
கதிர்:என்ன permission கேக்குற. கேளு சும்மா
முல்லை:நான் உனக்கு propose பண்ண வந்ததால தான் நீ எனக்கு propose பண்ணியா. இல்ல உண்மையா பண்ணியா
கதிர்:இது என்ன கேள்வி முல்ல.
உன்ன காலேஜ்ல பார்த்த முதல் நாளே உன்ன எனக்கு பிடிச்சுது. அது காதல்னு நா உணர கொஞ்ச நாள் தேவைப்பட்டது. நீயும் என்ட அப்போலாம் சரியா பேசமாட்ட அதனால உனக்கு என்ன பிடிக்கலனு நினைச்சு நா உன்கிட்ட வர தயங்குனேன்.
என்னைக்கு நீயே என்ன தேடி வந்தியோ அப்போவே முடிவு பண்ணிடேன். உன்கிட்ட என் காதல சொல்லிடனும்னு.
முல்லை:நீங்க இவ்வளவு யோசிங்கனு எனக்கு தெரியாது.
உண்மை சொல்லனும்னா உங்கள முதலில் பாத்தப்ப சுத்தமா எனக்கு பிடிக்கல
கதிர்:என்னது😲
முல்லை:இருங்க இருங்க. நீங்க வெண்ணிலாவ கல்யாணம் பண்ண போறீங்கனு நினைச்சு உங்க கிட்ட நெருங்கி வர யோசிச்சேன்.
கதிர்:சரி விடு இப்பதான் எல்லாம் நல்லா போகுதுல
முல்லை:ஆமான்ல
முல்லை:எங்க இதுக்கு முன்னாடி நீங்க யாரையாவது love பண்ணி இருக்கீங்கள
கதிர்:என்னடி கேள்வி இது
முல்லை:பதில் சொல்லுங்க
கதிர்:இல்லை
முல்லை:உண்மையா
கதிர்:நா ஆசையா பாத்த முதல் பொண்ணும் நீதான். என் மனசுல நிறைஞ்ச முதல் பொண்ணும் நீ தான்
முல்லை:இனியும் அப்படி தான் இருக்கனும். உங்க கண் என்ன தவற யாரையும் பாக்ககூடாது. உங்க மனசு என்ன தவற யாரையும் நினைக்க கூடாது.
கதிர்:உன்ன தவற என் வாழ்க்கையில் யாரும் கிடையாது.
முல்லை:என்னோடு வாழ்க்கையில என் அப்பாவ தவிர இருக்கு முதல் ஆண் நீங்க தான். கடைசி வரைக்கும் நீங்க மட்டும் தான்.
கதிர்:அப்ப நம்ம பையன்
முல்லை:ஆமால. அவன மறந்துட்டனே
கதிர்:மறப்ப மறப்ப
முல்லை:நா ஒன்னும் மறக்கல சும்மா சொன்னேன். நம்ம பையனுக்கு நா பேரே select பண்ணி வச்சுடேன். தெரியுமா?
கதிர்:பேரா என் பேரு
முல்லை:ஆதவன்
கதிர்:ரொம்ப அழகா இருக்கு
முல்லை:நீங்க கதிரவன் அவன் ஆதவன். எப்படி எனா idea
கதிர்: நீ யாரு
முல்லை:😏
கதிர்:சரி மணியாகிட்டு கிளம்பலாமா
முல்லை:கிளம்பலாம் வாங்க.
வருடங்கள் ஓடியது..
மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.
வழக்கம் போல படிப்பு,காதல்,நட்பு,கோபம் என வாழ்க்கை நன்றாக சென்றது.
அன்றைய தினம் முல்லையை வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில் வெண்ணிலாவை தன் bike ல் ஏற்றி சென்ற கதிருக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின் அவன் வாழ்க்கை மாறியது.
மருத்துவமணையில் கண்விழித்த கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பது. வெண்ணிலாவிற்கும் அவனுக்கு நிகழவிருக்கும் திருமணம்.
எதுவும் புரியாத கதிர் முல்லையிடம் பேசினால் தெளிவு கிடைக்கும் என அவளுக்கு போன் செய்ய போன் switch off.
சரி கல்லூரி சென்று அவளை சந்தித்து இதற்கு ஒரு முடிவு எடுக்கலாம் என நினைத்தான்.
மூன்று நாட்கள் ஒய்விற்கு பின் கல்லூரிக்கு சென்ற கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
முல்லை கதிருக்கு விபத்து நடந்த மறுநாளே TC வாங்கி கொண்டு சென்று விட்டாள் என்று.
முல்லையின் வீட்டிற்கு சென்றான் கதிர். அவர்கள் வீட்டை காலி செய்து மூன்று நாள்கள் ஆகியிருந்தன.
இந்த உலகமே இருண்டது கதிருக்கு.
எங்கு போனாள்?
ஏன் போனாள்?
தன்னிடம் பேசாமல் இருக்க காரணம் என்ன?
எங்கு தேடியும் முல்லை கிடைக்கவில்லை.
வெண்ணிலாவிற்கும் கல்லூரியில் TC வாங்கப்பட்டது.
கதிர் வெண்ணிலா திருமணமும் நடந்து முடிந்தது.
வெண்ணிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தில் வெண்ணிலா உயிர் பிரிந்தது.
முல்லைக்கும் தனக்கும் பிறக்கும் குழந்தைக்கு வைக்க நினைத்த பெயரை இனி முல்லை தனக்கு இல்லை என உணர்ந்தவன்.
முல்லையின் நினைவுகளோடு வாழ எண்ணி ஆதவன் என்னும் அந்த பெயரை வெண்ணிலாவின் குழந்தைக்கு வைத்து ஆதவனுக்கு தந்தையா வாழ்கிறான்.
இணைவோம்...🙏