37

2.1K 116 218
                                    

திருமணம் முடித்து கௌதமின் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றனர் .ஜான்வியின் தாயின் அறிவுரைப்படி முதலில் ஜான்வி அங்கிருந்த ஒரு சிறிய பூஜை அறையில் சென்று விளக்கேற்றி தொழுத பின் ஒவ்வொரு சடங்காய் செய்தனர் .

பாலும் பழமும் கொடுக்க வேண்டும் .முதலில் ஜான்வியிடம் பார்வதி கொடுத்தவர் "ஜான்வி பாதி குடுச்சுட்டு கௌதமுக்கு கு..."என்று கூறி முடிப்பதற்குள் ஜான்வியோ மொத்த பாலையும் குடித்துவிட்டு முழித்துக் கொண்டிருந்தாள் .

அவளின் திருட்டு முழியை பார்த்து அனைவரும் சிரிக்க கௌதமோ அவளின் திருட்டு முழியில் முதலில் சிரித்தவன் பின் அவளின் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதட்டின் மேல் ஒட்டி இருந்த பாலை துடைத்து விட்டான் .

பார்வதியோ தலையில் அடித்துக் கொண்டார் " பாதி குடுச்சுட்டு மீதியை கௌதமுக்கு குடுன்னு சொல்றதுக்குள்ள இப்டி குடுச்சு முடுச்சுட்ட "என்று கேட்க

அவளோ "அம்மா காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடலம்மா.மணி இப்போ ரெண்டு ஆச்சு அப்பறோம் எனக்கு பசிக்குமுள்ள "என்று முகத்தை சுருக்கி கூற அவள் கூறிய விதத்தில் அனைவரும் சிரிக்க பார்வதியோ முறைக்க முயன்று சிரித்துவிட்டார்

.தலையில் அடித்துக் கொண்டவர் இன்னொரு கிளாஸ் பாலை எடுத்து வந்து கௌதமிடம் முதலில் கொடுத்தார் .அவன் பாதி அருந்திவிட்டு ஜான்வியிடம் கொடுக்க அவள் அதையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டாள்.அவள் குடிக்கும் வேகத்திலேயே அவள் பசியை உணர்ந்தவன் "அத்தை எல்லாரும் சாப்பிட போகலாம்.கல்யாணம் முடுஞ்சதும் வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லி இங்க வந்து ரொம்ப நேரமாச்சு. "என்று கூற பின் அனைவரும் சென்று ஒரு உணவகத்தில் கிண்டலும் கேலிகளுடனும் உண்டனர் .

இறுதியாக அனைவருக்கும் ரசகுல்லா வைக்கப்பட ஆதியோ அந்த ரசகுல்லாவை பார்த்தவன் சத்தமிட்டு சிரிக்க துவங்கினான் .அவன் அப்படி சத்தமிட்டு சிரிப்பதை பார்த்து அனைவரும் குழம்ப ஜான்வியோ அவனின் சிரிப்பின் பொருள் உணர்ந்து "ஷு.... ஷு... ஆதி"என்று அருகில் இருந்த அவன் வாயை பொத்த

தோழனா என் காதலனாWhere stories live. Discover now