27

1.8K 129 76
                                    

கண்களில் துளிர்ந்த கண்ணீர் இப்பொழுதோ எப்பொழுதோ விழுந்து விடுவேன் என்று அச்சுறுத்த அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சென்று அமர்ந்தான் கெளதம் .தலை பாரமாக இருக்க தலையை கையில் தாங்கி அமர்ந்தவனை தோளில் யாரோ தட்டும் உணர்ச்சியே நினைவுக்கு கொண்டு வந்தது .

தோளில் யாரோ தட்ட நிமிர்ந்து பார்க்க திவ்ய நின்றிருந்தாள் .திவ்யா அவனை பார்த்து சிரித்தவள் "ஏய்ய் பக்கி ஆதி அண்ணா வந்ததுல இருந்து மேலயே வர மாட்டேங்குறானு அங்க திட்டிகிட்டு ஓருக்காரு நீ என்ன இங்க கவுந்து உக்காந்துருக்க ?"என்று கேட்க அவனோ மௌனத்தையே பரிசாய் கொடுத்தான் .

அவள் அவனின் தோரணையில் துணுக்குற்றவள் சற்று கடுமையான குரலில் "என்னாச்சுடா?ஏதும் பிரச்னையா ?"என்று கேட்க அவனோ உதட்டளவில் புன்னகைத்து இல்லை என்று தலை அசைத்தவன் அவளோடு மேடைக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் .அதன் பின் அன்று ஜான்வி அவனிடம் பேச எத்தனையோ முறை முயற்சி செய்தும் அவன் அவளிற்கு பிடி கொடுக்க விலை அவளிடமிருந்து நழுவிக்கொண்டே சென்றான் .

திருமண வேலையில் பிஸியாக இருக்கிறான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள் அதன் பின் தோழிகள் கூட்டம் அவளை வேறு எதையும் சிந்திக்க விடாமல் எய்ய அவனின் கண்கள் அவளையே ஒரு வித ஏக்கத்துடன் தொடர்வதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ,எனில் அந்த ஏக்கப்பார்வையை இரு ஜோடி கண்கள் கண்டு கொண்டது .ஒரு ஜோடிக் கண்கள் குழப்பமாக மறு ஜோடி கண்களோ இன்பமாக . அன்று வரவேற்பு முடிந்து இரவு மொட்டைமாடியில் ஆதித்யாவும் மற்ற நண்பர்களும் கூடினர் bachelor பார்ட்டிக்காக .

அவனது கல்லூரி நண்பர்கள் ,வேலையில் இருந்த நண்பர்கள் பள்ளி நண்பர்கள் என அனைவரும் சுற்றி அமர்ந்து ஆளுக்கொரு போட்டேலுடன் குடித்து கும்மாளமிட்டபடி அமர்ந்திருக்க ஆதித்யாவோ நாளை காலை திருமணம் இருப்பதால் குடியை தொடாமல் cokeudan அமர்ந்து இருந்தான் .

ஆதித்யா அங்கே தானும் ஒரு கையில் பீருடன் அமர்ந்திருந்த பிரவீனை பார்த்தவன் "கெளதம் எங்க பிரவீன் ?"என்று கேட்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now