ஜான்வி "அவங்கள நா அப்டி நெனைச்சதில்லம்மா எனக்கு டைம் வேணும் .இதெல்லாம் நா யோசிச்சதில்ல .அண்ட் எனக்கு அபி மேல அப்டி எண்ணம் எதுவும் வந்ததில்லம்மா இனியும் வராதுன்னு தான் நினைக்குறேன் நீங்க வேணாம்னு சொல்லுறீங்களா ப்ளீஸ் ?"என்க

பார்வதிக்கோ சிறிது வருத்தம் தான் தனது மகளின் முடிவில் எனினும் திருமண விஷயத்தில் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நினைத்தவர் "ம்ம் சரி கண்ணா உடம்ப பாத்துக்கோ இன்னும் எவ்ளோ நாள் ட்ரைனிங் ?"என்க

அவளோ "இன்னும் ஒரு மாசம் ட்ரைனிங் இருக்கும்மா "என்க

அவரும் "சரிடா கண்ணா நாங்களும் அவங்க கேட்டதும் நல்ல யோசனையாச்சேன்னு நெனச்சோம் ஆனா உனக்கு விருப்பம் இல்லேங்கலை எதுவும் பண்ண முடியாது .நாங்க சொல்லுறோம் டா "என்க

அவளும் தன்னை புரிந்து கொண்ட அன்னையின் அன்பை நினைத்து சிரித்தவள் "சரிமா நா வைக்குறேன் "என்று கூறி அழைப்பை துண்டித்தாள் .

தாமதமின்றி ஜான்வியின் முடிவை பார்வதியும் சேகரும் அழைத்து கூறி விட ரேவதிக்கோ கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அதை தன தமயனிடம் காட்டவும் செய்தார் "இதுக்கு தான் நா அவ கிட்ட கேக்க வேணாம் நாமளே முடிவு பண்ணுவோம்னு சொன்னேன் கேட்டிங்களா ?உலகத்துல இல்லாத பொண்ண பெத்துடீங்க அவ விருப்பத்தை கேட்டு செய்றதுக்கு "என்று கத்த

ஜான்வியின் தம்பிக்கோ கோபம் வந்து விட்டது போனினை வாங்கியவன் "அத்த கல்யாண விஷயத்துல என் அக்கா விருப்பம் தான் எங்க விருப்பமும் .உலகத்துல இல்லாத பொண்ணா இருக்க பொய் தான் அவளை பொண்ணு கேட்டு வீட்டுக்கு வந்தீங்க நீங்க தேவை இல்லாம அப்பாவை மரியாதை குறைவா பேசாதீங்க "என்க

ரேவதிக்கு சற்று குரல் மட்டுப்பட்டு விட்டது "அதுக்கில்லடா சின்னு .."என்று அவர் ஏதோ கூற வர

அவனோ "ஒன்னும் சொல்ல வேணாம் அத்த முடிவு தெருஞ்சுருச்சுல்ல அபி மாமாக்கு வேற எடத்துல பொண்ணு பாருங்க "என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான் .

தோழனா என் காதலனாWhere stories live. Discover now