தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை- 1 கப்
தேங்காய் பால் - 6 கப்
முந்திரி பருப்பு-10
பாதாம் பருப்பு -10
நெய் - 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகைசெய்முறை:
வாணலியில் அடுப்பை வைத்து 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து ரவையை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்...
அதே வாணலியில் நெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்...
அதே வாணலியில் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதி வர ஆரம்பித்ததும் தீயை குறைத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரவையை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்...ரவை அதனுடன் நன்றாக சேர்ந்த பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்..
2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு முந்திரி பருப்பு, தேங்காய் பால் சேர்த்து பரிமாறினால் ரவை கூழ் தயார்..
YOU ARE READING
எங்க வீட்டு சமையல்
Non-Fictionஎனக்கு தெரிஞ்ச உணவு வகைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... பிடிச்சுருந்தா வோட் பண்ணி கமெண்ட் பண்ணுங்க...நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க... #4 food in 10-9-2019