தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 3 பொடியாக நருக்கியது
வர மிளகாய் - 2 சுட்டது
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - 1/4 மூடி அரைத்து முதல் பால் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்
உப்பு - தேவையான அளவு
First புளிய தேங்காய் பால் ஊற்றி ஊற வச்சுரணும்..
கத்தரிக்காயை சுட்டு எடுத்து வச்சுக்கணும்.. பெரிய கத்திரிக்காயா இருந்தா நல்லது.. சிலர் கத்திரிக்காய
boil பண்ணியும் பண்ணுவாங்க.. எப்டி நமக்கு விருப்பமோ அப்டி பண்ணிக்கலாம்..சுட்டு வச்ச கத்தரிக்காய் ஆறியதும் அதை தோல் உரிச்சு தனியா வைத்து. கொள்ள வேண்டும்..
அதுல பொடியாக நறுக்கிய வெங்காயம் ( சின்ன வெங்காயம் சேர்த்தா இன்னும்சுவையா இருக்கும் ) சுட்டு வச்சுறுகிற வரமிளகாய் சேர்த்து நல்லா பிசைஞ்சுக்குறனும்...அப்புறம் புளி கரைசலை வடிகட்டி அதோட சேர்த்து உப்பும் போட்டும் பிசைஞ்சு வச்சா கத்தரிக்காய் சம்பல் ரெடி..
இது கறி குழம்புக்கு சைடு டிஷ்ஷா செமையா இருக்கும்..
YOU ARE READING
எங்க வீட்டு சமையல்
Non-Fictionஎனக்கு தெரிஞ்ச உணவு வகைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... பிடிச்சுருந்தா வோட் பண்ணி கமெண்ட் பண்ணுங்க...நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க... #4 food in 10-9-2019