❤உன் மைவிழி
கொண்டு
கண்டாய் எனை..
நானோ மறந்தேன்
அக்கணம் உலகை..
மாயங்கள் நீள்கிறதோ
என் உயிர் வரை..❤ஒருவாரு டாக்டரை சமாளித்து விட்டு வெளியில் வந்தவள் ஒருவாரு அங்கிருந்த ஓரிருவரிடம் உதவி கேட்டு ஆட்டோ ஒன்றை பிடித்து RK designers ஐ வந்து சேர்ந்தாள் சாரு.
அங்கும் ஆட்டோ டிரைவரிடம் சண்டையிட்டு வாக்குவாதம் செய்ய.. டிரைவரும் இவளை சமாளிக்க முடியாது தலையில் அடித்துக்கொண்டு கட்டணத்தைக்குறைக்கவே நினைத்ததை சாதித்த திருப்தியில் வீரநடை போட்டு அங்கு உயரமாய் நின்று இருந்த கேட் அருகே சென்றாள் சாருமதி.
நுழைய போனவளை தடுத்தது ஓர் குரல்.."ஏம்மா இங்க வா ஐடி காட்டு.."
திரும்பியவள் கண்டது விறைப்பாய் சாம்பல் நிற ஆடையில் நின்றிருந்த கேட் காவலாளியை தான். அவன் அணிந்திருந்த ஆடை சாருமதியை பொலிஸ் என நினைக்க வைக்க..இருந்தும் அனைவருக்கும் வர வேண்டிய பயம் தான் அவளது அகராதியிலே கிடையாதே..
திரும்பி அவனை போலவே விறைப்பாய் நின்றவள்..
"என்ன என்னான்னு கேட்குறேன்..என்னையவே உள்ள விட மாட்டேன் சொல்றீங்களா.." ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு பாவனையை முகத்தில் ஏற்றி இறக்கி அவள் கேட்க.."நான் எப்போம்மா உன்ன உள்ள விட மாட்டேன் சொன்னேன்..ஐடிய காட்டு உள்ள போகலாம்.." சற்றே தயங்கி பின்னகர்ந்தவாரு கேட்டான் அவன்.
"என்னத்தைய காட்ட சொல்லுறான் தெரிலயே..சிவா சார் வேற எதுவும் சொல்லல.." எண்ணியவாரு இவள் விழிக்க..
அவள் திரு திரு என விழிப்பதை உற்று பார்த்தவன்.."அப்போ உன்கிட்ட ஐடி இல்ல..நீ உலவு பார்க்க வந்த சாரோட எதிரி கம்பனி ஆளு..கரக்ட்டு..இரு.." அவன் ஓடிச்சென்று அங்கு கேட் அருகே இருந்த ஓர் அறைக்குள் நுழைய போக..
"ஓஹோ அப்போ சிவா ஐயா அனுப்பின ஆளே சந்தேகபடுறிங்களா நீங்க.." சத்தமாய் சாரு கேட்க..
CITEȘTI
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Dragosteசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....