மூங்கில் நிலா -7

3.6K 103 16
                                    

அதற்கும் மேல் அந்த டைரியை புரட்ட அவளுக்கு மனமில்லை. அது எப்படி அவன் கைக்கு கிடைத்தது என்று கூட வனமோகினி அறியாள். நடந்த அமளியில் அவளுக்கு பசிக்க கூட இல்லை.அதற்குள் இரவாகிவிட்டிருந்தது. மெல்ல மெல்ல குளிர்க் காற்றும் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது.

எழுந்து சென்று உடையை மாற்றிக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சுருங்கி படுத்து விட்டாள். காலையில் நடந்த அதிர்ச்சி கல்யாணம், களைப்பு, கூடவே எதுவும் சாப்பிடாமலே வனமோகினி உறங்கிப் போனாள்.

நள்ளிரவில் அழையா விருந்தாளியாய் அந்த கனவு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

நள்ளிரவில் அழையா விருந்தாளியாய் அந்த கனவு.
"வசி வசி, என்னை விட்டுட் டு போயிடாதே டா, வனிக்கு பயமா இருக்கு வசி, இங்கயே இரு வசி ... வசி.. " வன மோகினி உறக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

அச்சமயம் தண்ணீர் குடிக்க அவள் அறையை கடந்து சென்ற வசியின் காதுகளில் அவள் குரல் தெளிவாகவே விழுந்தது. அவள் அறை கதவும் தாளிடப் படவில்லை.

கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தவன் வன மோகினி உறக்கத்திலே உளறிக் கொண்டு அழுவது கண்டு பதறி விட்டான்.

கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தவன் வன மோகினி உறக்கத்திலே உளறிக் கொண்டு அழுவது கண்டு பதறி விட்டான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

விக்கி விக்கி வனி அழுவதும், மூச்சிறைப்பதும் அவனை என்னவோ செய்தது.
அவளை வாரி தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு அவளுக்கு ஏன் அந்த நிலை என்று புரியவில்லை.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now