ஆரம்பம் -2

3.1K 148 16
                                    

வாணி என்னடாம்மா நீ மட்டும் வந்திருக்க சங்கவை வரல என்று வாணியின் அம்மா தனபாக்கியம் கேட்கவும்....

இல்ல அவள் வரலனு சொல்லலிட்டா! அம்மா ஒரே தலை வலியா இருக்கு, எனக்கு  டீ போட்டு கொடும்மா.......

சரி நீ ரூம்ல போய் படுத்துக்க ....நான் டீ எடுத்துக்கிட்டு வரேன்....

சரிம்மா என்றவள் ரூமிற்கு சென்றதும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு..... கடற்ரையில் சங்கவை சொன்னது மனதை வலிக்கும்படி செய்தது..,
************************************
கடற்கரையில்...........

சவி இங்க பாரு நீ எதுவும் தெரிந்து செய்யல உன்னை பகடையாக்கி அவங்க செஞ்ச தவறுக்கு நீ எப்படி பொறுப்பாகுவ என்றதும்.....

என்னோட மனசாட்சி என்னை கேள்வி கேட்டு  உலுக்குதே....,.

இங்கே பாரு மனசாட்சி மண்ணாங்கட்டி என்று புலம்புறதை மொதல்ல நிறுத்து காட்டமாக வாணி பேசவும் துடித்துவிட்டாள் சவி...

தனக்கென  இருக்கும் ஒரே தோழியும் வெறுத்துவிட்டாள் என்று நினைக்கும் போதே........,....... ஒரு முடிவெடுத்தவள் வாணியிடம்

நான் போய்டுறேன் என்றதும்.....

என்ன-........வாணி

ஊரை விட்டு போய்டுறேன் -சவி

அப்படியே அறைஞ்சனு வச்சிக்க என்னடி உம்மனசுல நினைச்சுகிட்டு இருக்க ..... கோபத்துடன்  குறுக்கும் நெடுக்குமாக நடந்தவள் சவியின் அருகே வந்து ஏன்டி நாலு வருஷத்துக்கு முன்னாடி  எந்த நிலமையில் நான் உன்னை பார்த்தேன் என்ற ஞாபகம் இருக்கா என்றதும்...

அந்த நாள்..........

டேய் அவளை விட்றாதீங்க..... அவ தப்பிச்சா நம்ம தல உருண்டுவிடும் ஜாக்கிரதை என்று.....  அந்த மையிருட்டீல் பத்து பேர் கொண்ட கும்பல்...... நாலாபுறமும் தேடியது.....

கைகளிலும் உடலில் ஆங்காங்கே வெட்டு பட்ட காயங்களுடன் உயிரை கையில் பிடித்து கொண்டு மூச்சிரைக்க அந்த காட்டு பகுதியில் ஓடினாள்.

கடவுளே அவனுங்கிட்ட நான் மாட்ட கூடாது. என்னால ரெண்டு உயிர் அநியாயமாக போய்விட்டது இவனுங்க பாவத்துக்கு சாட்சியா இருந்த நானும் போய்ட்டா..... இல்ல ஆண்டவா என் அப்பா அம்மாவுக்கு நான் ஒருத்தி மட்டும் தான் ஆ.... அம்மா..... இந்த காலை நகர்த்தினா வலி உயிர் போகுதே  இதுக்கு மேல...........

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Where stories live. Discover now